தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது: மு.க.ஸ்டாலின்
அன்று பெரியார் வரலாறு இளைஞர்களுக்கு வழிகாட்டும் என்றார், பின்பொருநாள் அண்ணா வழி வழிகாட்டும் என்றார், அவ்வப்போது கலைஞரின் திராவிட கொள்கை வழிகாட்டும் என்றார்
இப்பொழுது பசும்பொன் சிங்கத்தின் வழி வழிகாட்டும் என்கின்றார்
தேசியமும், ஆன்மீகமும் பேசியவர் தேவர் பெருமகன் அவர் வழி அப்படி
பிரிவினைவாதமும் நாத்திக வாதமும் பேசியவர் பெரியார் இவர் வழி இப்படி
அப்படியானால் இவர் என்ன சொல்ல வருகின்றார்?
ஆகவே தமிழர்களே எந்த வழியும் செல்லுங்கள், எப்படியும் போங்கள், ஆத்திகம் நாத்திகம் பேசுங்கள், பகுத்தறிவு பேசுங்கள், இந்தி படியுங்கள், படிக்காமலும் போங்கள், திராவிடம் பேசுங்கள் அப்படியே இந்திய தேசியம் வாழ்க என சொல்லுங்கள், எதுவேண்டுமானாலும் செய்து தொலையுங்கள்
ஆனால் வாக்கினை மட்டும் எங்களுக்கு தந்துவிடுங்கள் என்பது இவர் சொல்லவருவது,
இது மு.க ஸ்டாலின் வழி
எமது சிற்றறிவுக்கும், பகுத்தறிவுக்கும் அவ்வளவுதான் விளங்குகின்றது
தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவின் படத்தைக் காட்டி வெற்றி பெறுவோம் : தம்பிதுரை
எங்களுக்கு ஆயிரத்தில் ஒருவனும், அடிமைப்பெண் படமும் வேண்டும் ,
பட்டிக்காடா பட்டணமா போன்ற இம்சைபடங்கள் எல்லாம் காட்டினால் வாக்களிக்க மாட்டோம்.
ஓர் சந்தேகம்:
மறவருக்கும், அகமுடையாருக்கும் புறனானூற்றில் விளக்கம் இருக்கின்றது,
கள்ளர் என்பது கூட பசுகூட்டத்தை யுத்தத்தின் முன்னறிவிப்பாக கவரும் வீரர்கள் என்கிறது பழம் இலக்கியம்
ஆனால் பிறமலை கள்ளர் என்றால் என்ன பொருள்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்,
பிறமலை என்றால் என்ன பொருள்? புற மலையா? அல்லது பிறர் மலையா?
எனக்கு தெரிந்தது ம.கோ ராமசந்திரன் சொன்ன "மலை கள்ளன்" மட்டுமே..
கலைஞரின் உடல் நலம் குறித்து விசாரித்த வைகோ!
பழைய கலைஞராக இருந்திருந்தால் வை.கோவிற்கு பதில் எப்படி கொடுத்திருப்பார் தெரியுமா?
"நாதஸ்வரத்தினை கையிலெடுத்து மூச்சடக்கி ஊதும் அளவிற்கு வலுவாக இருக்கின்றான் இந்த கருணாநிதி"
அதன்பிறகு வைகோ வாய் திறப்பார்????
No comments:
Post a Comment