Tuesday, October 25, 2016

உலகில் திருத்த முடியாதது வரலாறு மட்டுமே

சிலருடைய அல்ட்ராசிட்டிகள் தாளவில்லை, அதாகபட்டடது இவர்களை கேட்டுத்தான் வரலாற்றினை எழுதவேண்டும் என்கின்றார்கள்,


இவர்கள் வரலாற்று ஆசிரியர்களா? என்றால் இல்லை. ஆனால் தப்பு தப்பாக வரலாற்றினை சொல்லிகொண்டிருக்கின்றார்கள்


நாயக்கர் கால ஆட்சியில் 40 மண்டலங்களும் அவற்றின் உட்பிரிவான சேர்மை,சீர்மை அல்லது சீமை எனப்படும் உட்பிரிவுகள் இருந்தன‌


அப்படி நெல்லை சீமை, சிவகங்கை சீமை என பல சீமைகள் பிரிக்கபட்டன‌


இந்த சிவகங்கை சீமையின் ஆட்சியாளர் முத்து வடுக நாதர் என்பவர், அவர் மனைவி வேலுநாச்சியார்


இவர்களின் படையில் வீரர்களாக சேர்ந்தவர்கள் மருதுபாண்டியர்கள், மிக சிறந்த வீர்களான அவர்கள் பின்னாளில் தளபதிகளாக உயர்ந்தனர், முத்துவடுகநாதரும் அதன் பின் வீரமங்கை வேலுநாச்சியாரும் கொல்லபட அதன் பின் நாட்டை காக்கும்பொருட்டு தாங்களே வெள்ளையருடன் யுத்தம் புரிந்து வீரவரலாறு ஆயினர்


இதனை சொன்னால், ஏய் அவர்கள் அரசர்கள் தெரியுமா? என பொங்குகின்றனர்


எந்த பள்ளிகூடத்தில் படித்தார்கள் என தெரியாது, வரலாறு எப்படி சொல்கின்றது? 90% தென்னக மன்னர்களும் ஆற்காடு நவாப்பிற்கு வரி கட்டியவர்களே, அப்பொழுது வெள்ளையன் வந்தபின் வாரிசு தகறறில் பிரெஞ்ச் காரர்களும் , வெள்ளையனும் ஆற்காடு நவாப் வாரிசுகளுக்காக மோதி பின் வெள்ளையன் வென்றான்.


அவ்வெள்ளையப் ஆற்காடு நவாப் பிரித்த அதே வரியினை பிரிக்க வந்தபொழுதுதான் புலித்தேவன், கட்டபொம்மன், சிவகங்கை என எல்லா இடங்களிலும் யுத்தமாயிற்று


இதில் மருது சகோதரர்கள் அரசாண்டார்களாம், நான் தவறாக சாதிவெறியில் எழுதிவிட்டேனாம்


வரலாற்றினை எழுதுவதுமா? தவறு


உலகில் திருத்த முடியாதது வரலாறு, அது மட்டுமே


உங்களை கேட்டுத்தான் எழுதவேண்டிய அவசியமில்லை, விருப்பமில்லை என்றால் கிளம்பலாம்


உங்கள் விருப்பபடி "தேவர் காலடி மண்ணே" என பாட நான் வாலியுமல்ல, நீங்கள் தயாரிப்பாளரும் அல்ல‌


நன்றி, கிளம்புங்கள்

No comments:

Post a Comment