Tuesday, October 18, 2016

பரிதாபத்திற்குரிய தமிழக மக்கள்...

5001 பேர் கலந்து கொண்ட அதிமுக பால் குட ஊர்வலம்… ஸ்தம்பித்தது வேலூர்!


இனி பாருங்கள் பழனியில் பத்தாயிரம், மதுரையில் லட்சம், திருச்சியில் பல இலட்சம் என தமிழகம் முழுக்க என்னென்ன பால்கூட ஊர்வலங்கள் நடக்கும் என்று. விட மாட்டார்கள்


ஒருபக்கம் எதிர் கட்சி, உதிர் கட்சிகள் எல்லாம் போராட்டம் எனும் பெயரில் என்னவெல்லாமோ செய்து மக்களை இம்சை செய்கின்றன.




இன்னொரு பக்கம் ஆளும் கட்சியே பால் குட ஊர்வலம், அம்மா நலம்பெற ஊர்வலம் என கடும் நெருக்கடிகளை கொடுக்கின்றன‌


மக்களுக்கு கடும் இம்சை


இந்த மழைவேறு வந்து தொலையவில்லை, அது வந்து சாலைகளை சேறும் சகதியுமாக ஆக்கினால், இந்த எதிரி, உதிரி கட்சிகள் எல்லாம் சாலைபக்கம் ஆர்ப்பாட்டம் என வருமா? நெவர்.


அப்பொழுது அந்த சாலையில் மிகுந்த சிரமத்துடன் செல்வோர் இந்த அப்பாவி மக்களே, இந்த ஆர்பாட்டக்காரர்கள் அப்பொழுதெல்லாம் ஓய்வுக்கு சென்றுவிடுவார்கள்.


உண்மையில் மகா பரிதாபத்திற்குரியவர்கள் தமிழக மக்கள்.


அரசியல்வாதிகள் இம்சை, மழை என ஏதாவது ஒன்று அவர்களின் இயல்பு வாழ்க்கையினை பாதித்துகொண்டே இருக்கின்றது.



No comments:

Post a Comment