வீரப்பன் வனக்காவலன், இனச்சாமி என ஒரே அட்டகாசம், அவர் நல்லவர், காட்டை காத்தவர், வள்ளல், கன்னடனை அடக்கிய தமிழன் என இன்னபிற அடைமொழி வாழ்த்துக்கள்
அப்படியா என்றால் ஆம் அவர் எப்படி மானமுள்ள, வீரமுள்ள தமிழர் என்கின்றார்கள்.
இந்த நல்லவரையா கொன்றுவிட்டார்கள் என்றால், கண்கள் சிவக்க ஆம் அது எவ்வளவு பெரிய தமிழின அடக்குமுறை படுகொலை தெரியுமா? என கொந்தளிக்கின்றார்கள்
சரி சுட்டுகொன்றது ஜெயலலிதா அரசுதானே, இவ்வளவு பெரும் நல்லவனை சுட்டுகொன்ற அந்த அரசினை கண்டித்து ஒரு சத்தமும் இல்லையே ஏன் என்றால்
அது..ஹிஹிஹி.. அரசு..போலிஸ்....ஹிஹி ஹிஹிஹிஹி ஒரு மாதிரி கண் சிமிட்டுகின்றார்கள்,
மறு நொடியில் வீரப்பன் இனக்காவலன் என்கின்றார்கள்.
செத்தவன் மகா நல்லவன், கொன்ற அரசும் மகா கெட்டிக்கார நேர்மையான அரசு,
எப்படிபட்ட தத்துவம் பார்த்தீர்களா?, இதுதான் சீமானிசம்
பேசாமல் இப்படி பெயரினை மாற்றுங்கள்
"நாம் நரிகள்"
No comments:
Post a Comment