வைகோவிற்கு ஆதரவாகவும் சிலர் எழுதுகின்றார்கள், ஆனால் ஆதரவில் ஒளிந்திருப்பது அதே கலைஞர் எதிர்ப்பு
அதாகபட்டது ஈழதமிழர் விவகாரம் தொடர்பாக போராளிகளை சந்திக்கும் அனைத்துகட்சி கூட்டம் ஒன்றினை எம்ஜிஆர் கூட்டியபொழுது கலைஞர் அதனை புறக்கணித்தாராம்
அப்படி இன்று வைகோவும் செய்துவிட்டாராம்.
எம்ஜிஆர் ஒரு கூட்டம் கூட்டினார், அதற்கு ஒரு நாளைக்கு முன்பாக கலைஞர் ஒரு கூட்டத்தினை சாதுர்யமாக கூட்டினார் புலிகளை தவிர எல்லோரும் கலந்துகொண்டனர்.
எம்ஜிஆரின் முகம் கறுத்தது.
பின் கலைஞரின் அகில இந்திய டெசோ முயற்சியினை எம்ஜிஆர் கண்டுகொள்ளாமல் பிரபாகரனுக்கு ஆதரவளித்ததும், அந்த தைரியத்தில் அவன் சக போராளிகளை கொன்று குவித்ததும் அதன் பின் மனம் வெறுத்த கலைஞர் டெசோவினை நிறுத்தியதும் அன்று நடந்தது.
இப்படி திமுக அதிமுக விளையாட்டுக்கள் உண்டு, சரி இதில் என்ன ந்ன்மை ஈழ மக்களுக்கு விளைந்தது என்றால், அங்குள்ள போராளிகுழு எதுவும் உண்மையான விடுதலை நோக்கி போராடவில்லை, தமிழக கட்சிகளின் ஆதரவும் இப்படி நாடகமாகவே இருந்தது
ஆனால் உயிர்சேதம் குறைக்கபடவேண்டும் என்ற நோக்கில் எடுக்கபட்ட முயற்சிகளில் கலைஞரின் திட்டங்களே பெஸ்ட்
இருக்கட்டும். இப்படி திமுக் அதிமுகவின் அனைத்துகட்சி கூட்டங்களுமே ஒரு வகை வோட்டு அரசியல்தான், ஆனால் திறம்பட நடத்தவேண்டும் அல்லவா?
திமுக அனைத்து கட்சி கூட்டம் கூட்டினால், அதற்கு முந்தைய நாள் வைகோவும் ஒரு அனைத்துகட்சி கூட்டம் கூட்டினால் எப்படி இருந்திருக்கும்?
(தமிழகத்தின் உதிரிகட்சிகள் எல்லாம் அங்குதான் இருக்கின்றன)
ஆனால் செய்யவில்லை அல்லது செய்ய தெரியாது
பின் கலைஞர் அன்று எம்ஜிஆர் அழைத்து வந்தாரா?, அமெரிக்க அதிபர் அழைத்து வந்தாரா என துண்டை முறுக்கி வசனம் பேசவேண்டியது?
அந்த கழுத்தினில் தொங்க வேண்டியது கருப்பு துண்டு அல்ல...மாறாக...........
No comments:
Post a Comment