Saturday, October 15, 2016

ராவணன் மூலம் : கதை எப்படி வருகின்றது?




இராவணன் பயங்கரவாதத்தின் ஒரு வடிவம் என பேசிய மோடிக்கு இலங்கை புத்தமத துறவிகள் கடும் கண்டனம், அதுவும் இந்திய தூதரகத்தில் மோடிமீது கண்டனம் தெரிவித்து மனுகொடுக்கும் அளவு சென்றிருக்கின்றார்கள்,


கண்டனம் தான். வதந்தி பரப்புகின்றார் எனும் குற்றசாட்டெல்லாம் இல்லை


அவர்கள் புத்தர்கள் தானே?, பின்னர் ஏன் ராவணனுக்கு வரிந்துகட்டுகின்றார்கள் என்றால் இலங்கையர்கள் ராவணனை தங்கள் பெருமைக்குரிய மன்னராகவே கருதுகின்றனர், அங்கு ராவணன் அரண்மனை, கிணறு என ஏராளமான அடையாளங்களை அவர்கள் காத்துவருகின்றார்கள்.





அப்படிபட்ட சிங்களர்க புத்த பிக்குகளும் ராவணனை கொண்டாடுகின்றார்கள்.

பெரியார் கட்சியினர் சமீபத்தில் ராமனை விரட்டுவோம் என சென்னையில் நடத்திய ராவண ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நாம் அறிந்தது

ஆக இந்த புத்த பிக்குகளும், தமிழக பெரியாரிஸ்டுகளும் ராவணன் நமது மன்னன் என ஒற்றைகாலில் நிற்கின்றனர். நிற்கட்டும்

இதில் ஈழதமிழர்களின் வற்றாத கண்ணீருக்கு முதல் மற்றும் ஒரே காரணம் இந்த புத்த பிக்குகள்தான். அவர்கள் மட்டும்தான்.

இந்த பெரியாரிஸ்டுகள் சொல்வதென்ன? ஈழதமிழருக்கு நியாயமும் ஆறுதலும் வேண்டும். இந்தியா தலையிட்டு நியாயம் கொடுக்கவேண்டும்.

இப்பொழுது ராவணன் மூலம் கதை எப்படி வருகின்றது?

சிங்களர் என்பவர்கள் திராவிடர்கள், ஈழதமிழரும் திராவிடர்கள்.

ஆக ஒரு திராவிட சிங்கள வெறியர்களே இன்னொரு திராவிட குழுவான ஈழதமிழரின் துயருக்கு காரணமே அன்றி இந்திய பார்ப்பானிய அரசு அல்ல.

ஆக தமிழக பெரியாரிஸ்டுகளே, இந்த இந்திய பார்ப்பானிய, ஆரிய அரசு ஈழ தமிழரின் இன்னலுக்கு காரணம் எனும் பொய்யினை இனியாவது விட்டுவிட்டு,

உங்கள் சக திராவிடர்கள், ராவணின் வழிதோன்றல்களான சிங்கள ராவண பலய அமைப்பு, ராவண ஷக்தி அமைப்பு போன்ற் ராவண அமைப்புகளிடம் பேசி ஈழதமிழருக்கு நியாயம் வழங்குங்கள்

ராவணன் உங்கள் பெருமை மிகு அரசன் என்று நீங்கள் கத்தி கொடிபிடிப்பது உண்மை என்றால் இதனைத்தான் நீங்கள் செய்தாக வேண்டும்.

ஒரு திராவிட இனத்துக்கு, ராவணன் வம்சாவழிக்கு திராவிட அமைப்புகளும், ராவண வம்சமும் கொடுக்காத தீர்வினையா, பல இனம் கலந்து வாழும் இந்தியா கொடுத்துவிட முடியும்?

ஒருவேளை அன்றே நடந்த சகோதர சண்டையில்தான் விபீஷனனுக்கு உரிய பங்கினை அந்நியன் ராமன் வந்து வாங்கிகொடுத்து, ராவணனை வீழ்த்தி அரசில் அமர்த்தியிருப்பானோ?

இந்த கதையினை இன்னும் நீங்கள் தொடர்ந்தால், சக பங்காளிக்கு சொத்துகொடுக்காத திராவிடனை ஒரு ஆரியன் வந்து அடித்து பிரித்துகொடுத்தான் என்றல்லவா கதை செல்லும்?

அந்த அவமான வரலாறு வந்துவிட கூடாது அல்லவா?

அதனால் உங்கள் ராவண வம்சமான சிங்களர்களிடம் சொல்லி, ஈழ திராவிட ராவண வாரிசுகளுக்கு நியாமாக கிடைக்கவேண்டிய பங்கினை கொடுக்க சொல்லுங்கள்.







 கொசுறு





காவிரி பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருக்க காங்கிரசுக்கு தகுதியில்லை : தமிழிசை

இதனை சொல்ல பாஜகவிற்கு மட்டும் தகுதி இருக்கின்றதா?, அவர்களுக்கும் வெட்கமில்லை, இவர்களுக்கும் அறவே இல்லை

இதில் வீரமணி வேறு சென்று வீரவுரை ஆற்றினாராம். கன்னடமும் திராவிட நாடுதானே, ஒரு திராவிடன் இன்னொரு திராவிடனுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்பதனை கூட வெட்கமில்லாமல் மேடையில் சொல்கின்றார்


மொத்தத்தில் யாருக்கும் வெட்கமில்லை







No comments:

Post a Comment