Monday, October 17, 2016

சிறு சிறு செய்திகள்...





உலகளாவில் கச்சா எண்ணெய் 50 டாலர் அளவிற்கு அதாவது 3300 ரூபாய் அளவிற்கு சரிந்தால் கடுமையாக யோசித்து இந்தியாவில் 1 ரூபாய் குறைகின்றது

அதே விலை 0.10 டாலர் அதாவது 66 ரூபாய் கூடினால் உடனே 2 ரூபாயினை இந்தியாவில் அதிரடியாக உயர்த்துகின்றார்கள்

கேட்டால் ஏதோ மேடி அல்லது மோடி மேஜிக்காம்


இதில் என்ன மண்ணாங்கட்டி மேஜிக்? அதற்கு மேல் கேட்டால் தேசதுரோகியாகவோ அல்லது காங்கிரஸ்காரனகவோ முத்திரை குத்துவார்கள்

மேஜிக் புரியாமல் இருக்கலாம், மோசடிகள் புரியுமல்லவா?

மக்களின் வாழ்க்கை சுமையினை குறைப்பதை தவிர அப்படி என்ன பெரும் திட்டம் வைத்திருக்கின்றார்கள் என்று புரியாத தேசமிது.










சிவகார்த்திகேயன் அழுதாராம் உடனே பாண்டே அழைத்து பேட்டி கண்டாராம்

சரி தமிழகம் முதல்வர் இல்லாமல் அழுகின்றது அல்லவா? அப்பல்லோ டாக்டர்களில் ஒருவரையோ, அல்லது அந்த சசிகலா நடராஜனையோ அல்லது அந்த வெளிநாட்டு டாக்டர்களில் ஒருவரையாவது அழைத்து இவர் பேட்டி கண்டாரா?

இதனை பற்றி எல்லாம் நாம் பேசினால் முகநூல் மகா ஆபத்து என முடித்துவிடுவார்


பாண்டே சார், அந்த பூர்ணா எனும் நடிகை எதற்கோ மேடையில் அழுதாராம், அந்த பிள்ளையினைனை எப்பொழுது விசாரிக்க போகின்றீர்கள்?




 

No comments:

Post a Comment