Monday, October 31, 2016

தேவர் பெருமகனாருக்கு புகழ்வணக்கம் : சீமான்




தேவர் பெருமகனாருக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக புகழ்வணக்கம் : சீமான்


அன்னாருக்கு பித்து உச்சத்திற்கு சென்றுவிட்டது, கொஞ்சமும் சுய நினைவோ, வெட்கமோ, கூச்ச உணர்வோ சுத்தமாக இல்லை


தேசியத்தை போற்றிய பெருமகனார் அவர், பாகிஸ்தானிய பிரிவினையே அவர் ஏற்றுகொண்டவரில்லை





இந்த சீமானோ காஷ்மீர் பிரியட்டும், பஞ்சாப் பிரியட்டும் என அந்த பிரிவினை தலைவர்களை எல்லாம் கூட்டி மாநாடு நடத்தியவர், இந்திய தேசிய எதிரியும், இந்தியாவின் ஒற்றுமைக்கு பெரும் சவால் விட்ட பிரபாகரன் படத்தினை சுமப்பவர்

இந்த பிரிவினை வாதி அந்த தேசாபிமானிக்கு புகழ்வணக்கம் செலுத்த என்ன தகுதி இருக்கின்றது? கொஞ்சம் நிதானித்தவன் யோசிப்பான், அன்னாருக்கு அறவே இல்லை

ஒரு படத்தில் கவுண்டமணி பேப்பர் தோசை லிவருக்கு நல்லது என வழிந்துகொண்டே சொல்லும்போது சத்யராஜ் சொல்வார் "அடேய் பேப்பர் தோசை வேணும்ணா, வேணும்ணு சொல்லு அதுக்கு ஏன் இப்படி அள்ளிவிடுற..."

அப்படி சீமான் நேரடியாகவே எனக்கு வோட்டு தாருங்கள் என கேட்கலாம், இப்படி ஏன் சம்பந்தமில்லாமல் புகழ்வணக்கம் சொல்லவேண்டும்???

விரைவில் பாருங்கள் அங்கிள் தன் ஸ்பெஷல் காமெடியினை விரைவில் செய்வார்

அது என்னவாக இருக்கும்?

அதே தான் விரைவில் இம்மானுவேல் சேகரனுக்கும் புகழ்வணக்கம் செலுத்துவார் பாருங்கள் (முன்பே செய்திருக்கின்றார்)

அங்கு நிற்கின்றார் அங்கிள் சைமன்

அங்கிள் சைமனால் இன்னும் புகழ்வணக்கம் செலுத்தபடாதவர் இருவர், விரைவில் அவர்களுக்கும் நடக்கும்

ஒன்று சிங்கள வெறியன் ஜெயவர்த்தனே இன்னொருவர் ராஜபக்சே..






No comments:

Post a Comment