இம்சைகள் பலவகை ஒவ்வொன்றும் ஒருவகை
ஒருநண்பருக்கு நண்பர் என ஒருவர் வந்தார், பேசினார். நானும் பேசினேன்
என் பதிவுகளை பார்த்தீரா என்றார்? அதில் அப்படி ஒன்றும் சுவாரஸ்யம் இல்லை, 4 குஷ்பூ படம் இருந்தாலாவது பார்க்கலாம் அப்படியும் ஒன்றும் இல்லை
என் பதிவுகளை லைக் செய்யுங்கள், அல்லாவிட்டால் உங்கள் பதிவுகளை தொடமாட்டேன், உடனே நட்பு பட்டியிலில் இருந்து வெளியேறிவிடுவேன் என ஒரே அடம்
அய்யா எனக்கு கிடைப்பதே சொற்பநேரம், அதில் எப்படி எல்லோர் பதிவினையும் பார்க்கமுடியுமென்றால்,,
அடேய் உன் பதிவுகளை நான் பார்க்கும்பொழுது, அடுத்தவன் பதிவுகளை நீ பார்க்கமாட்டாயா? இது பெரும் தவறு, அப்படி என்ன தலைக்கணம் உனக்கு என சீறிகொண்டிருக்கின்றார்
சொல்லிபார்த்தாகிவிட்டது, அவர் மேத்யூ புயல்போல் பொங்கிகொண்டிருக்கின்றார்.
அது என்ன அவர் பதிவுகளை நான் மட்டும் படிப்பது, வாருங்கள் எல்லோரும் சேர்ந்து படிக்கலாம்
https://www.facebook.com/profile.php?id=100008340255033
இந்த பல்வலைகழகத்திலிருந்து உங்களுக்கு தேவையானதை (இருந்தால்) எடுத்துகொள்ளுங்கள், இவரிடம் என்னை பற்றி சொல்லி ஒருவன் சேர்த்துவிட்டானாம், அந்த Nellai Baskar S தேடிக்கொண்டிருக்கின்றேன்
மகனே Nellai Baskar S என் கையில் நீ மட்டும் கிடைத்தால் வதந்தி பரப்பிய 51வது ஆள் நீதான்,
முதல்வரை பற்றி பரப்பினால் மட்டும்தான் வதந்தியா? என்னை பற்றி இப்படி எல்லாம் சொல்லிகொடுத்தால் அது வதந்தி இல்லையா?
மனிதன் என்னை படுத்தியபாட்டிற்கு நஷ்ட ஈடு கேட்டால் அப்பல்லோ போட்டு கொண்டிருக்கும் "அந்த"
பில்லை விட அதிகமாக வரும் தெரியுமா?
Vaithianathan Subramanian, Madurai Kamaraj University.
Add Friend
No comments:
Post a Comment