ராம்குமாருக்கு பொங்கியவர்கள் இன்னும் பலருக்காக ஓலமிட்டு தீர்த்தவர்கள் யாரும் அருப்புகோட்டை அனிதா எனும் பெண்ணுக்காக ஒரு வார்த்தை சொன்னதாக தெரியவில்லை
வன்னிய பெண்கள் ஏமாற்றபட்டால் பொங்கும் ராமதாசும் , சில சர்ச்சைகளில் வந்து களமாடும் திருமா கும்பலலயும் காணவில்லை
அதாகபட்டது அருப்புகோட்டை அனிதா, காவல்துறையின் சில கருப்பு ஆடுகளால் ஏமாற்றபட்டதாக புலம்பிகொண்டிருக்கின்றார்.
மோசடிவழக்கில் கைதாகி ஜாமீனில் வந்து, சும்மா தமண்ணா லெவலுக்கு போஸ் கொடுக்கும் அனிதா, தன் மீதான வழக்குகள் காவல்துறையினை சேர்ந்த தன் மோசடி நண்பரால் பதியபட்டது என பேட்டியளிக்கின்றார்
(ஜாமீனில்தான் வந்திருக்கின்றார், அதற்குள் எவ்வளவு தைரியம்? சிறையில் ராம்குமார் செய்திகள் தாங்கிய செய்திதாள்கள் வரவில்லை போலும்)
இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கும்? அனிதா பேட்டி வந்துவிட்டதா?, அவள் என்ன சாதி என தேடிகொண்டிருப்பார்கள்.
சில சாதிகள் சத்தமே இருக்காது, சில சாதிகள் பொங்கி தீர்க்கும், அழிச்சாட்டியம் தாங்க இயலாது
பிறந்தால் அப்படிபட்ட சாதியில் பிறக்கவேண்டும், தவறு இருக்கின்றதோ இல்லையோ ஆர்ப்பாட்டம் செய்து ஒரு வழி செய்துவிடுவார்கள்
இதே அனிதா என்னை பாதித்தவன் கைகாட்டும் நபர் பிரமணாகவோ அல்லது இஸ்லாமியனாகவோ இருந்தால் இங்கு நடப்பதே வேறு. ஆனால் அவர் பிராமணன் இல்லை என்பதாலும், இஸ்லாமியன் இல்லை என்பதாலும் மகா அமைதி
விரைவில் அறிக்கைவிடும் கட்சிகளை பொறுத்து அனிதாவின் சாதி, அந்த காவல்துறை கருப்பு ஆட்டின் சாதியினை எல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்துகொள்ளலாம்
No comments:
Post a Comment