Sunday, October 30, 2016

தமிழ் கலாச்சாரத்தை காக்க அவதாரம் எடுத்திருப்பவர்கள்




 3 பதிவுகள்






தீபாவளியினை கொண்டாட மாட்டோம், வடக்கே இருந்து வருவதெல்லாம் தமிழனுக்கு எதிரி, அது தமிழ் கலாச்சாரத்தை அழித்துவிடும், நாங்கள் தமிழர்கள், தமிழ் கலாச்சாரத்தை மட்டும் பின்பற்றுவொம் என முழங்குபவர்கள் எல்லாம்


மட்டன் பிரியாணி, பரோட்டா சால்னா என வடக்கே இருந்து வந்த உணவுகளை கட்டி அடைத்துவிட்டு, அதற்கு மேலே குலாப் ஜாமூனும் , லட்டும் தின்றுகொண்டே சபதமெடுக்கின்றான்


பிரியாணியும், பரோட்டாவும் தமிழர் உணவா என நாம் கேட்டுவிட கூடாது.





இவர்கள்தான் தமிழ் கலாச்சாரத்தை காக்க அவதாரம் எடுத்திருப்பவர்கள்,

வடக்கத்திய உணவினை சத்தமில்லாமல் சுவைத்துவிட்டு, வடக்கு ஓழிக இந்தியம் ஒழிக, பார்பணம் ஒழிக, வடக்கத்திய கலாச்சாரம் ஒழிக என முழங்கிகொண்டிருப்பார்கள்.

எவனாவது கேப்பை கூழும், சோள காடியும், சம்பா அரிசு கஞ்சியும் குடித்துகொண்டு தமிழ் கலாச்சாரம் வாழ்க என சொல்கிறானென்றால் இல்லை .

இப்பொழுது கொஞ்சபேர் பெப்சியும், கோக்கும் பர்கரும் விழுங்கிகொண்டே சீனபொருள் வெளியேறு என சொல்லிகொண்டிருக்கின்றான்

அதாவது அமெரிக்க பொருள் பிரச்சினை இல்லையாம், சீன பொருள் இந்திய பொருளாதாரத்தை விழுங்குமாம்.

சீனா பாகிஸ்தானை தூண்டிவிடுகின்றதாம், அட பதர்களா பாகிஸ்தான் ராணுவத்தின் 80% ஆயுதம் அமெரிக்க தயாரிப்பல்வா? என சொன்னால் புரியாது.

எங்கிருந்து யோசிப்பார்கள் என்றே தெரியவில்லை, மகா சிந்தனையாளர்கள் உதித்துகொண்டே இருக்கின்றார்கள்.





மலையாள சினிமாவில் தனி இடம் பெற்றது செம்மீன் திரைப்படம்,


மீன்களின் சுவையில் தனி இடம் பெற்றிருப்பதும் செம்மீனே..


ஆக செம்மீன் என்பது எங்கிருந்தாலும் சுவையே..





சிகப்பு அரிசி சோறும், செம்மீன் குழம்பினையும் அடித்துகொள்ள இன்னொரு காம்பினேஷன் நிச்சயம் இல்லை.

"சிகப்பு நமக்கு பிடிக்கும்"







அவரின் தேசபற்றும், சமூகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற அவரின் விருப்பமும் போற்றபடவேண்டியவை


தேசம் பிரிந்து எல்லையில் இரத்தகளறி நடந்தபொழுது தன் சேனைகளை அனுப்பி கலவரத்தை அடக்க விரும்பியிருக்கலாம், ஆனால் அது தூரம் என்பதால் சாத்தியமில்லை


பின் தென் தமிழகத்தில், வடக்கன்குளத்தில் சில சர்சைகள் நடந்தபொழுது, புனிதமான ஆலயம் கூட தேவர் மகன் சினிமாவில் வரும் ஆலயம் போல பூட்டி கிடந்தபொழுது,





இரு சமூகம் மோதிகொண்டபொழுது, நீங்களாக நிறுத்துகின்றீர்களா? இல்லை என் சேனைகளை அனுப்பட்டுமா? என கேட்டதும் கலவரத்தை நிறுத்தவே.

ஆனால் வடக்கன்குளம் சர்ச்சைகள் அதற்கு முன்பே முற்றுபெற்றதால், சேனைகள் வருவதற்கு அவசியமற்று போயிற்று.

அவரின் தலையீட்டுக்கு அஞ்சியே அது நிறுத்தபட்டிருக்கலாம்.

அப்படி அமைதியான சமூகம் அவரின் விருப்பமாக இருந்திருக்கின்றது.









No comments:

Post a Comment