Thursday, June 16, 2016

குறு குறு செய்திகள்

"எங்கள் கலைஞர் யார் தெரியுமா? சர்வ சக்தி படைத்த எம்ஜிஆர் காலத்திலே பல்கேரியா கப்பல் ஊழலுக்காகவும், திருச்செந்தூர் ஆலய வைர வேலுக்காகவும் பெரும் போராட்டம் நடந்தி எம்ஜிஆரை கலங்க செய்தவர், இம்முறை பெரும் பலத்தோடு இருக்கும் அவர் ஜெய லலிதா அரசினை சும்மா விடமாட்டார்" : திமுக உறுப்பினர்

"பல்கேரிய ஊழல் சம்பந்தபட்ட அந்நாளைய அதிமுகவினர், வைரவேல் சம்பந்தபட்ட அதிமுக பிரமுகர்கள் எல்லாம் இந்நாளில் திமுகவில்தான் முக்கிய பொறுப்பில் இருக்கின்றனர் என்பதை இவர் அறிந்தால் இப்படி பேசுவாரா?" : துக்ளக் சோ

# ஆயிரம் சொல்லுங்கள் , சோ ராமசாமி ஆல்வேய்ஸ் கிரேட் :)




சமஸ்கிருதம் தெரியாமல் அவதிபடுகிறேன் - பொன்.ராதாகிருஷ்ணன்

# பாராளுமன்றத்தில் நாகர்கோவில் தொகுதி பற்றி பேச மக்கள் அனுப்பினார்களா? அல்லது டெல்லி கோயிலில் மணியாட்டி பூசை செய்ய அனுப்பினார்களா?

# அப்படி சமஸ்கிருதம் தெரியாமல் இவர் எந்தநாட்டு ராஜதந்திரியுடன் பேச அவதிபட்டார்? பாராளுமன்றத்தில் நன்றாக உறங்குவதற்கு சமஸ்கிருதத்தில் தாலாட்டு ஏதும் பாடி அது புரியவில்லையா?




சமஸ்கிருதத்திற்கு எதிராக சவுக்கு தூக்குங்கள் : கலைஞர்

# சவுக்கு என்ன? கல், உருட்டு கட்டை, கடப்பாரை, மண்வெட்டி எல்லாம் தூக்கிகொண்டு நேரே கோபாலபுரம் வந்துவிடட்டுமா?
..
...
..
...



அதாவது போராடுவதற்கு




 

நளினி குற்றமற்றவள், முருகன் குற்றமற்றவர் என மறுபடியும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்.

ராஜிவ் கொலை நடந்தபின் சிவராசனோடு திருப்பதி கோயிலில் நேர்த்திகடன் செலுத்தியவர்கள் இந்த நளினி முருகன்.

அதன் பின் காதல் நிறைவேறிய களிப்பில் இரண்டாம் முறை சென்று மொட்டைபோட்ட நிலையில்தான் முருகன் நளினியோடு கைது செய்யபட்டான்.


திருப்பதிக்கு நேர்ந்துவிட்டு கொலை செய்ய சென்றிருக்கின்றார்கள் என்றால் அது தற்செயல் சம்பவமா?

திருப்பதி சக்தி சாதரணமானதா? அங்கு சென்று நேர்ச்சை கடன் செலுத்திய ஒருவரும் தப்பவில்லை, சிவராசன் கும்பல் கொல்லபட்டது, நளினி சிக்கி சகலத்தையும் ஒப்புவித்தாள்

தெய்வம் நின்றும் என்றும் கொல்லும்.




 

ஒரு விஷயத்தில் கலைஞரும் ரஜினியும் ஒன்று, ஒருவருக்கு வாய்பளித்து பார்ப்பார்கள் அவர் ஜொலித்தால் அடுத்த வாய்ப்பு இல்லையேல் கடாசிவிடுவார்கள்.

வடிவேலு, டி ஆர் என கழற்றிவிட்ட‌ கலைஞரைவிட ரஜினி ரொம்ப ஸ்ரிக்ட்

பெரும் வெற்றிபடங்களை கொடுத்தாலும் குசேலனுடன் வாசு, பாபாவுடன் சுரேஷ் கிருஷ்ணா, லிங்காவுடன் கேஎஸ் ரவிகுமார் என தூக்கி எறிந்திவிட்டு நகர்ந்துவிடுவார், அது பயமா? அல்லது அவர்களிடம் அவ்வளவுதான் சரக்கா என ஒதுங்குகின்றாரா? சொல்லமுடியாது,


ரொம்பநாளாக ரஜினி செய்யும் வியாபாரம் இது.

இப்பொழுது ரஞ்சித் முறை, படம் எப்படி என்று வந்தால் தெரிந்துவிடபோகிறது, வென்றால் இன்னொரு வாய்பளித்து விரட்டுவார், இல்லை என்றால் உடனே கடாசிவிட்டு கிளம்புவார்

# இதற்கு ஏன் அவரை விமர்சித்து கொண்டிருக்கின்றார்கள் என்றுதான் தெரியவில்லை.


 


No comments:

Post a Comment