முடக்கபட்ட எனது முகநூல் கணக்கு,
இறுதியாக அவர்களின் புலனாய்வுதுறை மார்க்கிடம் மண்டியிட்டு என்னை பற்றி அழுதிருக்கின்றது, அட அழுவினிகளா
அவர்கள் அப்படி என்ன நினைத்துகொண்டிருக்கின்றார்களோ தெரியவில்லை, புனிதமான இயேசு,புத்தன், நபிபெருமான் வரிசையில் பிரபாகரனும் இருப்பதுபோலவும், தமிழகத்தில் அவர்களுக்கு பெரும் ஆதரவு இருப்பது போலவும், எனது பதிவுகளால் அது பாதிக்கபட்டதாகவும், மகா பரிசுத்த பிரபாகரனை நான் தூஷித்துவிட்டதாகவும் முகநூலை படைத்தாளும் மார்க்கிடம் அழுதிருக்கின்றார்கள்,
அவரும் ஒரு நாள் என்னை வகுப்பினை விட்டு அனுப்பிவிட்டார்.
இவர்கள் குற்றசாட்டினை பாருங்கள், நான் தமிழக மக்களிடம் தவறாக சொல்கிறேனாம், என்னை விட்டால் இவர்கள் எதிர்காலம் பாதிக்குமாம், கவனியுங்கள் சொல்வது ஈழத்து அரைவேக்காடுகள், அப்படி என்ன இந்த தமிழகத்தில் இவர்களுக்கு ஆதரவு இருக்கின்றது?
இன்னொன்று இவர்களை நான் பிளாக் செய்கிறேனாம், கொஞ்சமேனும் விவாதிக்க தெரிந்தவனிடம் விவாதிக்கலாம், உதாரணம் வடமராட்சி யுத்தம் இந்திய தலையீடால் நின்றது, இந்திய தலையிடாவிட்டால் பிரபாகரன் கொல்லபட்டிருப்பார் என்பது உண்மை, ஆனால் இவர்கள் வந்து என்ன சொல்வார்கள்? இந்தியா வயல்களில் உணவு வீசிற்று, நீ சொன்ன தேதி அன்று இந்தியா வரவில்லை, பிரபாகரன் சுற்றி வளைக்கபடவில்லை என குழப்புவார்கள்.
ஆனால் இந்தியா வந்ததை மறுப்பார்கள், மீறி சொன்னால் உன் அம்மா, அப்பா என தரம் தாழ்வார்கள், இவர்களிடம் என்ன பேசமுடியும்? கதவைத்தான் பூட்டமுடியும்.
இந்த கும்பல்தான் என் ஐடியினை முடக்கி இருக்கின்றது, அதுவும் பிரபாகரன் திருமணம் சம்பந்தமான பதிவிற்காக
புலிகளை பற்றி இன்னும் மகா கேவலமாக எழுதும் தளங்கள் உண்டு, பாதிக்கபட்ட ஈழத்தவர்தான் எழுதுவார்கள். அதுவும் பிரபாகனை அவர்கள் கேவலபடுத்தும் விதத்திற்கு மற்றவர்கள் என்றால் எப்பொழுதோ தற்கொலை செய்வார்கள், அந்த அளவிற்கு அது தரம் தாழ்ந்திருக்கும். நான் அம்மாதிரி எல்லாம் பதியவில்லை,
இன்னொன்று பலகாலம் எல்லா ஈழமக்களின் பதிவுகளை படித்தவன் என்றமுறையில் பகிர்ந்தேன் அவ்வளவுதான்.
சொல்கிறான் பாருங்கள், என்னை பேசவிட்டால் தமிழக நலனுக்கு ஆபத்தாம், என்ன அக்கிரமம், அப்படியானால் பெரும் திட்டத்தோடுதான் இருக்கின்றீர்களா?
இங்கு என்ன இருக்கின்றது? போர் என்றால் மக்கள் சவார்கள், பிரபாகரன் கொல்லபடவேண்டியவர் என்ற ஜெயா முதல்வர், புலிகள் கொல்லபட எத்தனை மக்கள் செத்தாலும் கவலை இல்லை என மவுனம் காத்த கலைஞர் எதிர்கட்சி தலைவர்.
மத்தியில் என்ன?, ஆனையிரவில் 50 ஆயிரம் சிங்கள ராணுவத்தை காப்பாற்றிய, ஒரே மிரட்டலில் புலிகளை ஓடசெய்த பாஜக அரசுதான் இன்றைய ஆளும் கட்சி, புலிகளின் நன்றியினை அனுபவத்தில் கண்ட காங்கிரஸ் எதிர்கட்சி
நெடுமாறன் எங்கோ பல்குத்திகொண்டிருக்கின்றார், வைகோ முக்காடு போட்டு அழுகின்றார், சீமான் ஏதோ உளறிகொண்டிருக்கின்றார், இதுதான் தமிழக யதார்த்தம் அதாவது உங்கள் இன உணவாளர்களின் நிலை.
இப்படி உங்கள் எந்த இந்திய புலி அபிமானத்தை நான் கெடுத்துவிடபோகிறேன்? ஏதோ காமெடியன் சீமானை, அவன் அள்ளிவிடும் புலிகளைதகளை நான் விமர்சித்தால் உங்களுக்கு புளிக்கிறதா
இந்த முகநூல்மீதும் பெரும் சந்தேகம் கிளம்புகின்றது.
இயேசு முதல் காந்தி வரை கிழிக்கின்றார்கள், அண்ணாவினை விபச்சார புரோக்கர் அளவிற்கு விமர்சிக்கின்றார்கள், சோனியா ஜெயா, கலைஞர் என இவர்கள் படுபகிரங்கமாக விமர்சிக்கபடுகின்றார்கள், அதனை எல்லாம் என்ன புகார் சொல்லியும் முகநூல் தடுக்கின்றதா?
கலைஞர் விமர்சிக்கபடுவது விதிமுறைகளை தாண்டி அருவெருக்கதக்க நிலைக்கு சென்றும் இன்னும் தடுக்கபடவில்லை
ஆனால் பிரபாகரனை பற்றிய விமர்சனம் மட்டும் தடுக்கபடுகின்றது, பதிவு நீக்கபடுகின்றது என்றால் இதற்கு யார் காரணம்? சமூக வலைதளமான முகநூலை நிர்வகிப்பது யார்? நிச்சயம் முகநூலின் இந்த போக்கு சரியல்ல.
இதற்குமேல் என்ன செய்வீர்கள்? ஐடி முடக்குவீர்களா? முடக்கிகொள்ளுங்கள், ஆனால் ஆயிரகணக்கான குழு, பக்கங்கள், தளங்கள் உண்டு, அங்கெல்லாம் ஆயிரம் கதைகள் வரும், தடுக்க முடியுமா?
எனக்கு மகா ஆச்சரியமான விஷயம் ஒன்றுதான்
நான் அதிகம் விமர்சித்தது மொசாத் மற்றும் அமெரிக்க அமைப்புகளைத்தான், நிச்சயம் இஸ்ரேலிய மொசாத்திற்கு தமிழக உளவாளிகள் இருப்பார்கள், அவர்களை மீறி ஒரு வரி கூட வராது, ஆனால் பாருங்கள் இதுவரை ஒரு மிரட்டல் கூட இல்லை, காரணம் அவர்கள் கெத்து அப்படி.
நீ எல்லாம் எங்களை என்ன செய்துவிடமுடியும் என்ற அவர்கள் கர்வம், அது உண்மையும் கூட.
ஆனால் அந்த யானைகளே சும்மா இருக்கும்போது இந்த கொசுக்களின் தொல்லை தாளவில்லை
இன்னமும் முடக்கலாம், இன்னமும் புகார் செய்யலாம், அது முகநூலின் தரத்தை குறைக்குமே ஒழிய எனக்கு ஒன்றுமில்லை, பார்க்கலாம்
அதற்காக எமது நாட்டினை பற்றி இல்லாத பழிகளை சுமத்தினால், நான் பார்த்துகொண்டிருக்க முடியுமா? ராணுவத்தாருக்கு மட்டும் பாதுகாப்புகடமை நமக்கு இல்லை என நினைக்கமுடியுமா? நாடு முக்கியம், அதன் பெருமைகளை குலைக்க, இல்லாத பொய்களை எவனாவது சொல்லும்போது அதனை தடுக்கும் கடமை நமக்கு உண்டல்லவா?
நான் இந்தியன், இந்திய குடிமகன் என்ற எண்ணமுள்ளவன் என் பின்னால் வரலாம், மற்ற யாரையும் நான் அழைக்கவுமில்லை, அவர்கள் என்னைபற்றி பேசவேண்டிய அவசியமுமில்லை.
110 கோடி மக்கள் கொண்ட இம்மாபெரும் தேசத்தை 10 லட்சம் கூட தேறா ஈழத்தவர் மிரட்டுவார்களாம், அதனை நாம் பார்த்துகொண்டிருக்கவேண்டுமாம்
வந்தே மாதரம்
இந்த கோஷத்தை தடுக்க முடியுமா? 110 கோடிபேர் எழும்பி சொன்னால் வங்க கடலே வட இலங்கையில் புகுந்துவிடும் ஜாக்கிரதை
ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள், அப்படி எந்த இனபடுகொலைக்கு இந்தியா துணை சென்றது? 1983ல் இருந்து 2009 வரை இந்தியா வந்த அகதிகள் எத்தனை ஆயிரம்?
இந்தியா என்ன கொன்றுவிட்டதா? அல்லது வைத்து ஆதரிக்கின்றதா?
அம்மக்களை அடித்து விரட்டியது நீங்கள், வைத்து ஆதரித்துகொண்டிருப்பது நாங்கள், அந்த மனிதாபிமானத்தில் தான் பேசிகொண்டிருக்கின்றோம்.
சொந்த மக்களுக்கு ஒருவேளை சோறுபோடாத நாயெல்லாம் மார்க்கிடம் சென்று அழுகின்றது.
No comments:
Post a Comment