அதாவது ஒன்று பிரபாகரன் இறந்த நாள் அல்லது பிரபாகரன் பிறந்நநாள் (அல்லது பிரபாகரனுக்காக இறந்தவர்கள் நாள்) தவிர ஏதும் தெரியாத தமிழக தமிழர்கள் இவர்கள்
ஆனால் ஈழ மக்களின் பதிவுகளில் வாரத்திற்கு மும்முறை புலிகளால் கொல்லபட்ட தமிழர்களுக்கான அஞ்சலி செலுத்தபட்டுகொண்டேதான் இருக்கின்றது சுந்தரம், மெண்டிஸ், சபாரத்தினம், உமா மகேஸ்வரன், யோகேஸ்வரன், ரஜனி, செல்வி என கிட்டதட்ட தினசரி யாருக்காவது அஞ்சலி செலுத்திகொண்டே சிலர் இருக்கின்றனர், எல்லோரும் புலிகளால் கொல்லபட்டவர்கள்
வரும் 19 பத்மநாபா கொல்லபட்ட நாளாம், அதை நோக்குமுன் இன்று யாரோ ராபர்ட்டுக்கு நினைவஞ்சலியாம், அவரும் புலிகளால் கொல்லபட்டாராம்.
இனி அடுத்த மாதம் அமிர்தலிங்கம் கொல்லபட்ட வெள்ளிவிழாவாம்.
என்ன கர்மமோ தெரியவில்லை, இந்த காட்டுமிராண்டி தனத்திற்குபெயர் தமிழர் விடுதலை போராட்டமாம். இதனை கண்டித்தவர்கள் துரோகிகளாம்.
ஈழ தமிழர்களை சிங்களனிடமிருந்து அல்ல,
மொத்த உலகத்திலிருந்து விடுவிக்கும் போராட்டமாகத்தான அது இருந்திருக்கின்றது , அப்படித்தான் சொல்லமுடியும்
நல்லவேளையாக காந்தி, மண்டேலா, சே குவேரா, மார்க்ஸ், லெனின் போன்றவர்கள் எல்லாம் ஈழத்தை தவிர வேறு நாட்டில் பிறந்தார்கள்,
ஒருவேளை அங்கு பிறந்திருந்தால் என்றோ துரோகி என சுட்டுகொல்லபட்டிருப்பார்கள்
No comments:
Post a Comment