Monday, June 27, 2016

ஒருவேளை டெல்லி பாஜக வேறு, தமிழக பாஜக வேறோ

சட்டம் - ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம்:தமிழிசை அறிவிப்பு

# அடடா, எவ்வளவு பெரும் அறிவிப்பு இது, கொஞ்சமேனும் சிந்தித்துதான் அறிக்கை விடுகின்றாரா அம்மணி? அல்லது ஏதும் ஜன்னி காய்ச்சலா?

# இவர்கள் கட்சிதான் மத்தியில் ஆட்சி செய்கிறது, சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்றால் மத்தியில் ஆளும் இவர்கள் கட்சிக்கு தெரிவிக்கலாம், இந்த மாநில அரசினை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியினை கொண்டுவாருங்கள் என சொல்லலாம், 7 தமிழர் என தேசதுரோகிகளுக்கு எல்லாம் குரல் எழுப்புபவர்களை இம்முதல்வர் விட்டு வைத்திருக்கின்றார் என புகார் கொடுக்கலாம்.

# அந்த தைரியம் இருக்கின்றதா? மாநில அரசை கலையுங்கள் என சொல்லும் தைரியமுண்டா என்றால் இல்லை, அதனை விட்டுவிட்டு ஆர்ப்பார்ட்டம் என்றால் யாரை ஏமாற்ற? சரி ஆர்ப்பாட்டம் என்றால் எப்படி? தனி நபர் எப்படி ஆர்பாட்டம் செய்யமுடியும்? ரோட்டின் ஓரத்தில் நிறுத்திவைத்து கையில் தட்டுகொடுத்துவிடுவார்கள்.

# மத்தியில் ஆள்வது பாஜக, தமிழகம் ஒரு மாநிலம். இதில் மாநில பாஜக தலைவர் சட்டம் ஒழுங்கு கெட்டதென்று தனியே ஒப்பாரி வைத்தால் என்ன அர்த்தம்?

# ஒருவேளை டெல்லி பாஜக வேறு, தமிழக பாஜக வேறோ?

அவசரநிலை சாபம் காங்கிரசை விடாது; பா.ஜ., தலைவர் ஜோஷி பாய்ச்சல்

# பாபர் மசூதி இடிப்பு பாவமும், அதனை தொடர்ந்த மும்பை குஜராத் கலவரங்களின் சாபமெல்லாம் உங்களை வாழ்த்துமா? அந்த சாபம் உங்களை சும்மாவா விடும்?

முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், 8 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இதற்கு பொறுப்பேற்று பதவி விலகினார் இளங்கோவன்

# அம்மணி தமிழிசைக்கு இந்த செய்தி எட்டியிருக்கலாம், பொன்னாருக்கும் தெரிந்திருக்கலாம்.

# இப்படி தானாக வந்து பொறுப்பேற்று ராஜினாமா செய்பவர்கள் இருக்கும் தமிழகத்தில்தான், பகிரங்க சவால் விட்டுவிட்டு வெட்கமே இல்லாமல் இன்னும் பேசிகொண்டிருக்கும் சீமானும் இருக்கின்றார்

# அவரை தூக்கி கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி வாசலில் வைத்து, கதிர் அரிவாள் சின்னத்தை அவர் நெற்றியிலே கதற கதற பச்சை குத்திவிட வேண்டும்.

No comments:

Post a Comment