Monday, June 13, 2016

காலம் காலமாக நடந்துகொண்டிருப்பது




ஏதோ நான் மட்டும்தான் புலிகளை விமர்சிப்பது போல பலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்.

புலிகளை விமர்சிப்பது காலம் காலமாக நடந்துகொண்டிருப்பது, அதுவும் படு கேவலமான விமர்சனங்கள் எல்லாம் உண்டு.  மிக மிக கீழ்த்தரமான விமர்சனம் அவை. உண்மையாகவும் இருக்கலாம்.

ஆனால் எழுத்தில் ஒரு தரம் வேண்டும் என்பதால் நம்மால் அப்படி எல்லாம் எழுத முடியாது.


நான் பகிர்வதெல்லாம் பலர் ஏற்கனவே எழுதியவை, இன்னும் ஈழமக்களின் பகிர்வுகளாக வந்துகொண்டிருப்பவை. இதோ இந்த சிவராசனின் வீடியோவினை பாருங்கள், இந்த சிவராசந்தான் இன்று பேரரைவாளனின் நிலைக்கு மூலகாரணம்.

புலிகளை விமர்சித்தால் புலனாய்வுதுறை என்னை தேடும் என்றார்கள். ஆனால்  மற்றவர்கள் எழுதும் எழுத்திற்கும் காட்டும் ஆதாரங்களுக்கும் புலிகளின் தற்கொலை படையினையே அவர்கள் தேடவேண்டும்

அப்படி புலிகளை தூக்கிபோட்டு சாத்துகின்றார்கள்.  கழுவி ஊற்றி சாணியால் அடிக்கின்றார்கள்.

அவர்களை எல்லாம் புலி அபிமானிகள் படித்தால். என்னை எல்லாம் கை கூப்பி வணங்குவீர்கள்.

((ராஜிவ் கொலை நடந்தவுடன் பிரபாகரன் மறுத்ததுதான் முதல் பேட்டி, ஆனால் அதன்பின் புலிகள் அடையாளம் காணபட்ட பின் அவர் மகா அமைதி, அது 2009 வரை தொடர்ந்தது )

 



இந்த பதிவைப்பார்க்கவும்.....






பொய்களை சொல்லி ஏமாற்றி கொலை வெறி ஆட்டம் போட்ட LTTE பயங்கரவாத கூட்டம் !
==========================
இந்திய படையை வெளியேற்ற பிரேமதாசவுடன் நட்ப்பை ஏற்படுத்தி இந்திய படை வெளியேறியவுடன் பிரேமதாசவை கொலை செய்து விட்டு துக்கம் விசாரிக்க தூதுவர்களை அனுப்பிய குள்ளநரித்தனம்,
ராஜிவை கொலை செய்வதற்கு ஒருமாதம் முன்பு காசிஆனந்தன் தலைமையில் இரண்டு முறை தூதுவர்களை அனுப்பி பழைய பிழைகளைமறந்து எங்களை மன்னித்து விடுங்கள் என்று ராஜிவை ஏமாற்றியவர்கள்,
பேரறிவாளன் என்ற படித்த இந்திய சிறுவனை மூளை சலவை செய்து படுகுழியில் தள்ளிவிட்டு சென்றவர்கள்...
தான்உண்டுதன் வேலை உண்டு என்று இருந்த நளினியை காதலில் வீழ்த்தி கர்ப்பமாக்கி தங்களின் தேவைக்கு பயன்படுத்திவிட்டு அவர் வாழ்வை நாசம் செய்தவர்கள் ...
இப்படி பல இந்தியயர்களை தங்களின் தேவைக்கு பயன்படுத்தி வாழ்வை சீரழித்துவிட்டு சென்ற மகாபாவிகள்.....
சிறுவர்களை பெற்றோர்களிடம் இருந்து பிடித்து வந்து வலுகட்டாயமாக போரில் ஈடுபடுத்திய ஐநா குற்றம் சாட்டிய போற்குற்றவாளிகள்
----------------------------
இறுதியில் சொந்த மக்களை துப்பாக்கி முனையில் பனைய கைதியாக்கி வெள்ளைக்கொடி ஆட்டி எதிரியிடம் சரண்அடைந்து கேவலமாக மாண்டு போனவர்கள்...



[facebook url="https://www.facebook.com/thevarvamsamfilmsindia/videos/1627655530888509/" /]

No comments:

Post a Comment