Monday, June 27, 2016

To End A Civil War : A Book

இறுதியாக புலிகளுடன் பேசிபார்த்துவிட்டு தலை தேறிக்க ஓடியவர் எரிக் சோல்கிம், சும்மா ஓடவில்லை ஆண்டன் பாலசிங்கத்தையும் இழுத்துவிட்டு ஓடினார்.

பாலசிங்கம் ஓடும்போதே கருணா இந்த பக்கமும், பிள்ளையான் குழு அந்த பக்கமும் தெரித்து ஓடியது.

FB_IMG_1467288096266

ஈழபிரச்சினையில் 1980களில் தலையிட்ட இந்தியா 1990லே தள்ளி நின்றது, அதுவும் 1991க்கு பின் தலைமுழுகிவிட்டது, 1999களில் ஆனையிறவில் சிங்கள ராணுவம் தத்தளித்தபோது கூட வாஜ்பாய் அரசின் நிலைப்பாடு ஒதுங்கியேதான் இருந்தது.

ஆனையிறவில் சிங்கள வீரர்களுக்கான குடிநீரை தடுத்து புலிகள் சிங்கள ராணுவத்தை பணிய வைத்தபொழுது, இந்திய உதவியினைத்தான் சிங்களம் நாடிற்று, ஆனால் இந்தியா ராணுவத்தை அனுப்பவில்லை,

ஆனால் புலிகள் அலறி அடித்து பின் வாங்கினர், அது யாழ்பாணத்தை கைபற்றும் ஒரே வாய்ப்பு, புலிகளின் பெரும் கனவு.

ஆனால் ஏன் புலிகள் பின்வாங்கினார்கள் என்பது இன்றுவரை மர்மம், காங்கிரஸ் அரசு என்றால் சோனியா விடவில்லை என்றாவது சொல்லலாம்,

ஆனால் அது வாஜ்பாய் அரசுதான், வைகோ கூட பங்குபெற்ற அரசு, ஆனாலும் புலிகள் ஏன் யாழ்பாணம் செல்லவில்லை? தடுத்த சக்தி எது என்று இன்றுவரை தெரியாது. ஆனால் ஏதோ நடந்து புலிகள் பின்னால் வந்தது மட்டும் நிஜம்.

அதாவது இனி தனிநாடு சாத்தியமில்லை என பிரபாகரனுக்கு மண்டையில் உரைத்தநாள் அது.

அன்று இல்லையேல் என்றுமே ஈழம் கிடைக்காது எனும் நிலை அது, துப்பாக்கி முனையில் நாடு அடைய அதுதான் ஒரே தருணம், ஆனால் முடியவில்லை. ஏன் என்றால் அதுதான் உலக அரசியல்.

துப்பாக்கி சண்டையின் எல்லை என்ன? என புலிகள் உணர்ந்திருந்த சமயம் அது.

இதனை அடுத்துதான் நார்வே தலையிட்டது.

2002ல் பேச வந்தார்கள், 2005 வரை எத்தனையோ முறை சொல்லிபார்த்தார்கள், அதன்பின் ஏதோ இலங்கை அரசுக்கு சிக்னல் எங்கிருந்தோ கிடைத்தபின்புதான் 2006ல் யுத்தம் தொடங்கிற்று.

நார்வே தூதுகுழு என்பது அமெரிக்காவின் முகமூடி, உலகில் அமெரிக்கர்கள் பல முகமூடிகளில் அலைவார்கள். அந்த முகத்தின் பிண்ணணியில் இருந்தது முழுக்க அமெரிக்கா மட்டுமே.

இந்தியா புலிகளை ஒழித்தது என கண்ணை மூடிகொண்டு, காதினை பொத்திகொண்டு சொல்பவர்களை விடுங்கள், அவர்கள் அப்படித்தான், மெதுவாக காதில் சென்று சில்க் ஸ்மிதா தற்கொலைக்கு கூட இந்தியாதான் காரணம் என சொன்னாலும் நம்புவார்கள்,

இந்தியா பழகிபார்த்துவிட்டு சூடுபட்டு ஒதுங்கிய பின், உலக நாடுகள் எல்லாம் எப்படி பேசிபார்த்திருக்கின்றன, எப்படிபட்ட வாய்புகளை எல்லாம் பிரபாகரன் உதாசீனபடுத்தியிருக்கின்றார் , எப்படி எல்லாம் அதிகார தோரணை காட்டி இருக்கின்றார் என்பது விளங்கும்.

இப்படி இந்தியா,நார்வே முதல் ஜப்பான் வரை புலிகள் விரட்டியபடியினால்தான் 2009 முள்ளிவாய்க்காலில் ஒரு நாடும் தலையிடவில்லை, என்னதான் தமிழர்கள் கொல்லபடுகின்றார்கள் என புலிகள் ஓலமிட்டாலும், அது பிரபாகரன் உயிரை காப்பாற்றும் முயற்சி என்பது அவர்களுக்கு புரிந்தது

நிச்சயமாக சர்வதேச நாடுகளை அமைதியாக்கி வைத்தது புலிகளே அன்றி யாருமல்ல என்பதனை இப்புத்தகம் அழகாக சொல்கிறது, எரிக் சோல்கிம் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட புத்தகம்.

அந்த புத்தகம் "To End a Civil War"

முடிந்தால் வாசித்து பாருங்கள், பல புரட்டுகளுக்கு விடைகிடைக்கும், அதில் விளங்குவது ஒன்றே இன்றுதான்

ஆண்டன் பாலசிங்கத்தின் வாய் இல்லை என்றால் புலிகளை நாய் கூட சீண்டியிருக்காது, பாலசிங்கத்தின் வாய்தான் புலிகளின் பலம். அவர்தான் மேதகு, சங்கைகுரிய, துதிகுரிய எல்லாம்.

அவர் வெளியேறியதும் வேரற்ற மரம்போல சரிந்தனர் புலிகள், பிரபாகரன் வெறும் முகமூடி.

தமிழர் மறுவாழ்வுக்காக பாடுபட்டேன், மீண்டும் வந்து தமிழரை வாழவைப்பேன் : மகிந்த ராஜபக்சே

# புலிகள் எனும் கொடூர அமைப்பிடமிருந்து வன்னி மக்களுக்கு விடுதலை கொடுத்த வகையில் ராஜபக்சே சொன்னது சரியாக இருக்கலாம்,

ஆனால் சீமான், திருட்டு முருகனுக்கு மறுவாழ்வு கொடுப்பதற்காகவாவது அவர் மறுபடியும் அதிகாரத்திற்கு வந்தாகவேண்டும்.

No comments:

Post a Comment