என் முகநூல் அனுபவத்திலே நான் மிகவும் ரசித்த காமெடி இதுதான்
அதாகபட்டது நணபர் Sanjay Athreya என்பவர் 1990ல் பத்மநாபா கொல்லபட்டதும், ஜெயகாந்தன் பேசிய வீடியோவினை பகிர்ந்திருக்கின்றார், அதில் மபொசி, வாழப்பாடி ராமமூர்த்தி என பலரும் பேசியிருப்பர், அதர பழசான வீடியோ அது, ராஜிவ் கொலைக்கும் முந்தையது.
இதனை பார்த்துவிட்ட சில புலி அடிமைகளோ, சீமானியர்களோ இப்படி வழக்கமான ஆதிதமிழ் வாழ்த்துடன் வாழ்த்தியிருக்கின்றார்கள்
"டேய் ஜெயகாந்தா, வந்தேறி பயலே, விரைவில் இருக்குடா உனக்கு, ஏய் மபோசி உனக்கு தமிழன்னா யார்னு தெரியுமா? ... முவனே, உங்க அம்மா தமிழச்சியாடா? போராட்டம்ணா உனக்கு என்னெண்ணு தெரியுமா?,
டேய் ஜெயகாந்தா, தமிழன் நாடு அடைந்தவுடன் உனக்கு இருக்குடா. உன்னை விடவே மாட்டோம்....."
என மிரட்டல் வேறு
"தமிழக உறவுகளே இந்த இரு கிழவன்களின் முகவரியினை கொடுங்கள், விட கூடாது
நண்பர்களே இவர்கள் இருவரின் வீட்டுமுன்னால் மனிதவெடிகுண்டாக வெடிக்க நான் தயார்
முதலில் இவர்கள் முகநூலை முடக்குங்கள், இவர்கள் போராட்டத்திற்கு ஆபத்தானவர்கள்
முதலில் பத்மநாபாவினை புலிகள் கொன்றதற்கு இந்த கிழவர்களிடம் ஆதாரம் கேளுங்கள், விடாதீர்கள், உறவுகளே அவன் வீட்டிற்கு படையெடுங்கள்"
என கோரிக்கை வேறு, இதில் எவனோ ஜெயகாந்தனை முகநூலில் கண்டிருக்கின்றானாம். இவர்களுக்கு ஏதடா முகநூல் கணக்கு???
# ஜெயகாந்தன் மறைந்து ரொம்பநாள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடதக்கது, தமிழரின் தனிபெரும் அடையாளமான, சோவியத் யூனியன் தமிழரின் சொத்து என அறிவித்து தடையற்ற விசா வழங்கி கவுரத்திருந்த ஜெயகாந்தனை அறியாத் இவர்கள், அட அவர் மறைந்ததை கூட அறியாத இவர்கள்தான் "தமிழ் போராளிகள்"
# சரி, மபொசி யார்? தனிதமிழ் இயக்கம் நடத்தியவர், திருத்தணி தமிழகத்தோடு இணைய போராடியவர், சென்னை இன்று தமிழகத்தோடு இருக்க அவர்தான் காரணம், அவரின் தமிழ்பற்று போற்றதக்கது, சிலப்பதிகாரத்திற்கு அவர் ஒரு நடமாடும் விளக்கம், பெரும் தமிழறிஞர், குமரி மீட்பிலும் அவர் பங்கு உண்டு,
அவர் மறைந்ததை கூட அறியாத இவர்கள்தான் "தமிழ் போராளிகள்"
# இப்படி ஜெயகாந்தனையும், மபொசியினையும் அறியாத இந்த பதர்கள்தான் இன்று "தமிழ் உணர்வாளர்களாம்"
மறக்க நினைத்தாலும் காதோரம் இந்த வரிகள் ஒலித்துகொண்டே இருக்கின்றன,
"டேய் ஜெயகாந்தா, வந்தேறி பயலே, விரைவில் இருக்குடா உனக்கு, ஏய் மபோசி உனக்கு தமிழன்னா யார்னு தெரியுமா? ...
தமிழன் இல்லாத நீங்கள் எப்படி தமிழின போராட்டம் பற்றி பேசலாம்..டேய் த்தா.. போராட்டம்னா என்ன தெரியுமாடா... சிந்தனைனா என்ன தெரியுமாடா..டேய் மபொசி தமிழன்னா யார் தெரியுமாடா, தமிழ்நாடுன்னா என்ன தெரியுமாடா?
மேதகு பற்றி தெரியுமா? வீரம் தெரியுமா? மானம் தெரியுமா? ஏய் கிழட்டு வந்தேறிகளா, தமிழ்நாடு தமிழருக்கே. தமிழ்பேச தெரியுமா உங்களுக்கு? தமிழருக்கு நீ கிழித்தது என்ன கிழவா? என்ன தெரியும் உனக்கு?
உங்க அம்மா.....அக்கா...அடுத்த வீட்டுக்காரி, சமையல்காரி, பால்காரி...வேலைக்காரி...................."
மறக்கமுடியாமல் சிரித்துகொண்டே இருக்கின்றேன் , அவர்கள் இறந்துவிட்டார்கள் என்றால் நம்ப கூட இவர்கள் தயாராக இல்லை.
No comments:
Post a Comment