Thursday, June 30, 2016

"இனபடுகொலை" என்ற பதத்திற்குள் எப்படி கொண்டு வருவீர்கள்?

"இறுதி யுத்தத்தில் யாழ்பாண தமிழர், மலையக தமிழர், கிழக்கு மாகாண தமிழர், கொழும்பு தமிழர், கண்டி தமிழர் என யார் மீதும் சிறு கீறல் கூட விழவில்லை,

புலிகளின் கட்டுபாட்டு பகுதியிலிருந்த மக்கள்தான் பாதிக்கபட்டார்கள், அதுவும் அவர்களை புலிகள் செல்ல அனுமதித்திருந்தால் சாவுகள் நடந்திருக்காது, எனவே இதனை "இனபடுகொலை" என்ற பதத்திற்குள் எப்படி கொண்டு வருவீர்கள்?

இனபடுகொலை என்றால் மொத்த தமிழினத்தையும் அல்லவா நாங்கள் தாக்கியிருக்கவேண்டும்?, மாறாக புலிகளுக்கு எதிரான இலங்கை ராணுவத்தில் தமிழர்களும் பங்கெடுத்ததை சுட்டி காட்டுகின்றோம்

போர்குற்ற விசாரணை குறித்து விசாரணை நடத்த நாங்கள் தயார்.

எத்தனையோ தீர்வுகளுக்கு இறங்கி வந்தபின்னும் யுத்தம் நின்றபாடில்லை.

புலிகள் இல்லாவிட்டால் சிங்கள் தமிழர்களை எல்லாம் அழித்துவிடுவான் என்ற பிம்பம் எங்கே?

இன்றும் எத்தனை லட்சம் தமிழர்கள் அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள், பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவரே தமிழர் என்பதை குறித்துகொள்ளுங்கள், அந்த அளவிற்கு ஜனநாயகத்தை நாம் காப்பாற்றுகின்றோம்

வடக்கு கிழக்கில் தமிழர்களால் தேர்ந்தெடுக்கபட்ட தமிழர்களே முதல்வராக உள்ளனர், வலுகட்டயாமாக அமர்த்த பட்ட சிங்களர்கள் அல்ல.

1983க்கு பின் கொழும்பில் தமிழருகு எதிராக எங்கே கலவரம் நடந்தது? 1995 முதல் அரசகட்டுபாட்டில் இருக்கும் யாழ்பாணத்தில் என்ன நடந்தது? 2009க்கு பின் வன்னியில் என்ன தாக்குதல் நடந்தது ,

புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் மறுநொடி இலங்கையில் தமிழர் வாழமுடியாது எனும் பிரச்சாரம் எப்படி பொய்யானது என்பதை உலகம் கண்டுகொண்டிருக்கின்றது" :

ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் சிங்கள அமைச்சர் முழக்கம்

# இதற்கு எந்த நாடு பதில் சொல்லமுடியும? ஆழ்ந்த அமைதியில் இருக்கின்றன சர்வதேச நாடுகள் , இதற்கு பதில் திருமுருகன் காந்தி கும்பலிடமும் இருக்காது, ஆனாலும் சம்பந்தமில்லாமல் சீறிகொண்டே இருப்பார்கள் அர்த்தமே இல்லாமல்.

No comments:

Post a Comment