Friday, June 24, 2016

மக்கள் தீர்ப்பிற்கு கட்டுபட்டது பிரிட்டன்





ஐரோப்பிய யூனியலிருந்து நடையினை கட்டியது பிரிட்டன், அதன் பணமதிப்பு சரிகிறது, பங்கு சந்தைகளில் கடும் குழப்பம்.

கொஞ்சநாளைக்கு இனி அங்கு நடைபெறபோகும் குழப்பங்கள் கொஞ்சமல்ல.


முதன் முதலாக ஹிட்லர் காலத்திற்கு பின் பெரும் சோதனை காலத்தினை எதிர்கொள்கிறது பிரிட்டன்.

லண்டன் ஒருபோதும் வீழ்ச்சி அடையாது என சொன்ன சர்ச்சிலும், ஒரு காலத்தில் தூக்கி நிறுத்திய தாட்சரும் இன்று இல்லை.

ஆனால் யாராவது நிச்சயம் வருவார்கள், வந்து தூக்கி நிறுத்துவார்கள், அவர்கள் வரலாறு அதனைத்தான் சொல்கின்றது

ஒரே காரணம் நாட்டுபற்றும், பொறுப்பும், கட்டுபாடும் மிகுந்த மக்கள் அவர்கள், அதுதான் அவர்களின் ஒரே பலம்.

எப்படி சமாளிக்கபோகின்றார்கள் என உலகமே கவனித்துகொண்டிருக்கின்றது.

எனினும் இதனை தொடர்ந்து இன்னும் பல நாடுகள் நடையினை கட்டலாம், பெரும் குழப்பங்கள் ஐரோப்பாவில் ஏற்படலாம்.

இனி ஐரோப்பாவின் தனிக்காட்டு ராஜா ஜெர்மனி,

ஐரோப்பிய ராணி ஏஞ்சலா மெர்கோல்.







No comments:

Post a Comment