கலைஞரின் ரோமாபுரி பாண்டியன் புத்தகம் சீரியலாக்கபட்டு நிறைவடைந்தது, விழா கொண்டாடபட்டது, அடுத்து தென்பாண்டி சிங்கம் நாவல் சீரியல் தொடங்குகின்றது
தன் எல்லா புத்தகங்களையும் சீரியல் சினிமாவாக்கும் கலைஞரின் முயற்சி பாராட்டதக்கது,
ஆனால் கண்ணதாசனின் நினைவுகளில் மூழ்கி இருக்கும்போது ஒரு வேளை அந்த கதையினையும் கலைஞர் சீரியலாக எடுத்துவிடுவாரோ என்ற அச்சத்தில் குபீர் என்கிறது.
அதாகபட்டது அந்நாளைய திமுக, ரஷ்யாவின் லெனின் இயக்கம்போல தன்னை காட்டிகொண்டது, டால்ஸ்டாயின் பாதிப்பில் பல கதைகள் உருவாயின, ஏழைகளின் கண்ணீரை உருகி சொல்லும் கதைகள் கழகத்தால் வந்தது, கலைஞரும் அப்படி ஒரு கதை எழுதினார்
"வாழ முடியாதவர்கள்" என்ற கதை அது.
கதை என்னவென்றால் வரதட்சனை கொடுக்க வழி இல்லா வறுமையான தந்தை, தன் மகளை தானே மணமுடித்துகொள்வார்
கண்ணதாசன் இந்த கதையினை தனது வனவாசத்தில்(பகுதி 24) பதிந்தே இருக்கின்றார், காலத்திற்குள் எல்லா கதைகளையும் சீரியலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் கலைஞருக்கு இந்த கதை நிச்சயம் விலக்கு,
காரணம் இக்கதையில் நடிப்பதற்கு சன்னி லியோன் கூட வரமாட்டார்.
இப்படிபட்ட அதிபயங்கர கற்பனைகளுக்கு சொந்தகாரர் என அவருக்கும் சில பக்கங்கள் இருக்கின்றது, இருக்கட்டும்
இந்த போலி திராவிட அரசியல் முகங்களை கிழிகிழி என கிழித்த ஒரே தமிழன் கண்ணதாசன் தான்.
# தலைவன்டா................
No comments:
Post a Comment