Friday, June 10, 2016

எப்படிபட்ட விசித்திரம் இது?




5 இலங்கையரையும் விடுவிக்க சொல்லி அவர்களின் சொந்த நாடு இலங்கையே ஒருவார்த்தை சொல்லாதபோது, அவர்கள் தமிழர்கள் அதனால் விடுவித்தே ஆகவேண்டும் என உள்நாட்டினர் ஊர்வலம் போகும் விசித்திரத்தை நாளை பார்க்கலாம். எப்படிபட்ட விசித்திரம் இது?

உலகில் எங்காவது இப்படி ஒரு நிகழ்வினை காண முடியுமா? தன் சொந்தநாட்டில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை விடுவி என எந்தநாட்டு மக்களாவது போராடி கேள்விபட்டிருக்கின்றீர்களா?

இப்படி நாட்டுபற்றை வெளிபடுத்திய பின் தேசம் எப்படி வளரும்?


Stanley Rajan's photo.

சீனா அப்படி, அமெரிக்கா இப்படி, சிங்கப்பூர் அப்படி என சொல்ல இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது?

மத்திய அரசுக்கு எமது கோரிக்கை எல்லாம் ஒன்றுதான், அந்த 5 அந்நிய நாட்டு தீவிரவாதிகளும் சிறையில் இருக்கட்டும், இதோ இருசக்கர வாகனத்தில் வருபவர்களை, இந்த தேசபற்றில்லா துரோகிகளை அப்படியே இலங்கை அனுப்பி வையுங்கள்

ஒரு காலத்தில் ஏதோ ஒரு தண்டனையாக ஒரிசா பக்கம் இருந்து ஒரு கூட்டமாகத்தான் சிங்களன் இலங்கை சென்றானாம்.

அதே தண்டனையினை இவர்களுக்கும் கொடுக்கலாம், இந்தோனேஷியா அருகே ஆளில்லா தீவுகள் ஏராளம் உண்டு, அங்கு அனுப்புங்கள்













No comments:

Post a Comment