Thursday, June 16, 2016

மொழித் திணிப்பு....





வெள்ளையன் ஆங்கிலத்தை திணித்தானாம், ஒரு கும்பல் வாதிட்டுகொண்டிருக்கின்றது

உலகெல்லாம் ஆண்ட அவன் உங்களுக்காக தமிழ்படித்திருக்கமுடியுமா? உலகில் வாழ எது அவசியமோ அதனை நாம்தான் கற்றுகொள்ளவேண்டும்,.

எல்லா நாட்டவரும் எல்லா மொழியும் கற்கின்றார்கள், ஆனால் தன் சொந்தமொழி அடையாளங்களை காத்துகொள்கின்றார்கள். நாம் அதனைத்தான் செய்யவேண்டும், தமிழை காத்துவிட்டு அந்நிய மொழிகளை கற்கலாம், தவறில்லை


பாரதி அப்படித்தான் தமிழனாய் வாழ்ந்தான், ஆனால் எல்லா மொழிகளும் அறிந்திருந்தான்.

ஒரு மனிதனுக்கு கூடுதலாக கொஞ்சம் மொழிகள் தெரிவதில் என்ன தவறு வந்துவிடமுடியும்?

யாரும் எந்த மொழியினையும் யார்மீதும் திணித்துவிட முடியாது, தேவை என்றால் அவனவன் சொந்தமாக கற்றுகொள்வான், இது மானிட யதார்த்தம்.

தென்னகத்தில் மலையாளி, கன்னடன், தெலுங்கன் என எல்லோரும் ஹிந்தி கற்கின்றார்கள் அதற்காக அவர்கள் மொழி அழிந்துவிடவில்லை, வளரத்தான் செய்கிறது

ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் யாழ்பாணத்தார் தமிழ்பேசும் போது மற்றமொழி கலக்காமல் பார்த்துகொள்வார்கள், நிச்சயம் அந்த பண்பு பாராட்டதக்கது. ஆனால் ஐரோப்பாவில் எல்லா மொழியும் படிக்கத்தான் செய்கின்றார்கள்.

மலேசியாவில் வாழும் சீனருக்கு, சீனாவின் பூர்வீகம் தெரியாது, ஆனால் மலாய்மொழி தெரியும், கூடவே சீனமும் தெரியும், அதனை மறந்துவிடவில்லை அவர்கள்.

தொலைந்துவிட்ட எபிரேய மொழியினை மீட்டு அசத்தி இருக்கின்றது இஸ்ரேல், ஆனால் அவர்களின் பன்னாட்டு மொழிபுலமை யாருக்கும் சாத்தியமில்லை

இது வியாபார உலகம், பல இனங்களோடு பழகாமல் நாம் ஒன்றும் கிழித்துவிட முடியாது. அந்த இனங்களோடு பழக சில மொழிகளை கற்றே ஆகவேண்டும்.

விட்டால் கணிப்பொறி மொழிகளையும் பில்கேட்ஸ் திணித்தான், அமெரிக்கன் திணித்தான் என கிளம்விடுவார்கள் போல‌.







No comments:

Post a Comment