Monday, June 27, 2016

நாடு துண்டாகும்: வைகோ ஆவேசம்

ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் வெளியேறியது போல, இந்தியாவிலிருதும் மாகாணங்கள் வெளியேறவேண்டும் : வைகோ

FB_IMG_1467286405714

# இவருக்கு தேர்தல் தோல்வி ஜன்னியா? அல்லது விஜயகாந்தும் திருமாவளவனும் தனியாக பிடித்து நொறுக்கி எடுத்தார்களா? வாசன் தென்னை மரத்தில் கட்டி வைத்து அடித்தாரா? அல்லது திமுக பெரும் எண்ணிக்கையில் வென்றதால் அம்மா ரகசிய அடி ஏதும் பின் மண்டையில் கொடுத்தாரா? ஒன்றும் புரியவில்லை.

# காரணம் ஐரோப்பிய யூனியன் தனிநாடு அல்ல, சார்க், ஆசியான் போல, பிரிக்ஸ் போல ஒரு கூட்டமைப்பு, அந்த ஒப்பந்தம் பிடிக்காமல் பிரிட்டன் வெளியேறியதற்கும், இந்திய மாநிலங்கள் பிரிவதற்கும் என்ன சம்பந்தம்?

# இவர் மனைவி விவாகரத்து கேட்பதற்கும் (ஒரு வேளை கேட்டால்?), நாஞ்சில் சம்பத் பிரிந்து சென்றதற்கும் என்ன சம்பந்தம்?

# இந்த ஐரோப்பிய விவகாரத்தையே இப்படி குழப்பி தமிழக மக்களை ஏமாற்றபார்ப்பவர் எப்படி எல்லாம் கிரேக்க வரலாறை மாற்றியிருப்பார், எப்படி எல்லாம் புலிகளின் கோரமுகத்தை மறைத்திருப்பார்.

# அதெல்லாம் சரி வைகோ அங்கிள், அமெரிக்காவில் அடிக்கடி இனவெறி தெறிகின்றது, கருப்பர்கள் கேட்பாரற்று சுடபடுகின்றார்கள், என்றாவது ஆப்ரகாம் லிங்கன் வரலாற்றை சொல்லி, அமெரிக்கா விரைவில் உடையும், சிதறும் என சொல்கின்றீரா?

# அமெரிக்கா என்றால் பெரும் மவுனம் ஏன்? சந்ததி அங்கு வாழ்வாங்கு வாழ்கிறது என்றா? அல்லது ஈழபோராட்டத்தில் அமெரிக்க அரசு உளவாளியாக புலிகளுக்குள் ஊடுருவிய நன்றி கடனா?

சோவியத் யூனியன் போல இந்தியா சிதறும், இலங்கை உடையும் : வை.கோ எச்சரிக்கை

# இப்படி உடையும், சிதறும் என சொல்லி சொல்லி இறுதியாக சிதறி சின்னாபின்னமானது இவர் கட்சியும், இவர் கொண்ட கூட்டணியும்தான்.

No comments:

Post a Comment