Wednesday, June 29, 2016

சிதறல்கள்

சென்னை சங்கிலி கொலைகளை தடுக்க, ஒரு தமிழன் முதல்வராக வரவேண்டும் என எவனாவது சொல்வான் என கண்களில் விளக்கெண்ணெய் இன்னும் பல எண்ணெய்கள் எல்லாம் விட்டு விழித்திருந்து பார்த்தாலும் ஒரு பயலும் சொல்லவில்லை
> "மாற்றுவோம் .....எல்லாவற்றையும் மாற்றுவோம்.." என முழங்கிவிட்டு, அவசரமாக வீட்டை மாற்றிகொண்டு எங்கோ சென்றுவிட்டார்கள் போல் தெரிகின்றது. மாற்றுவோம் என்ற அர்த்தம் இப்படித்தான் இருந்திருக்கின்றது, முகநூல் ஐடிக்களை கூட மாற்றிவிட்டார்கள்





சங்கராச்சாரி சாமி , சுப்பிரமணியன் சாமி , சந்திரா சாமி , கிரிக்கெட் சீனிவாச சாமி , கணக்கு மேதை குமார சாமி
இன்னும் பல பூசாரி சாமிகள் எல்லாம் கடும் புண்ணியங்களை "பெருக்கி" வைத்திருக்கும் நாட்டில், மனிதனை மனிதனாக மதியுங்கள் எனும் பாவ காரியத்தை சொன்ன திராவிடர்கள் "பொறுக்கிகள்" தான்

# எல்.ஜி பெருங்காயம் மணம், ஒய்.ஜி காயம் விஷம்.




குடிபோதையில் கைதான மாணவி காவல் நிலையத்தில் ரகளை : செய்தி

>> வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம்
என்ற விந்தை மனிதர் தலைநிமிர்ந்தார்




ஒருவேளை "யாருக்கும் துணிச்சல் இல்லையா??" என கேட்டது, சீமான் கும்பலுக்கான கேள்வியாக‌ இருக்கலாமோ?

ராஜிவ் கொலையில் அந்நியநாட்டு தீவிரவாதிகளை விடுதலை செய் என கத்தும் இவர்களுக்கு, உள்ளூர் தமிழச்சிக்கு குரல்கொடுக்க நேரமில்லையா? என்பதின் மறைமுக கேள்வியாக இருக்கலாம்




 

No comments:

Post a Comment