Thursday, June 30, 2016

எப்படிபட்ட மனித நேயம் இது?

கூலிப்படைகளால் மக்களின் மனஉறுதி குலைவு:
திருமாவளவன் வேதனை

# அதே போன்றதொரு கும்பலால் பக்கத்து நாட்டில் எத்தனை லட்சம் மக்கள் பாதிக்கபட்டார்கள்? பணம் முதல் உயிர்வரை இழந்து நிர்கதியானோர் எத்தனைபேர். எத்தனை ஆயிரம் மக்கள் கதறி அழுதார்கள், அந்த வடுக்கள் ஆறுமா?

# அந்த கூலிபடையினை ஆதரிப்பீர்கள், அவர்களை கடல்கடந்து சென்று சந்தித்து விருந்து சாப்பிட்டு உற்சாகபடுத்துவீர்கள்
ஏதும் அவர்களுக்கு பிரச்சினை என்றால், இங்கே இந்திய அரசினை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பீர்கள்,

#ஆனால் உள்நாட்டில் நடந்தால் வேதனைபடுவீர்கள், மக்கள் மனஉறுதி குறையும் என கவலைபடுவீர்கள்

# எப்படிபட்ட மனித நேயம் இது?

No comments:

Post a Comment