Thursday, June 30, 2016

குற்றவாளிகளை தேடிக் கொண்டே இருக்கிறது...

ஸ்வாதி கொலவழக்கில் குற்றவாளிகளை காவல் துறை தேடுகின்றது

# ராமஜெயம் வழக்கு குற்றவாளிகளை சில ஆண்டுகளாக தேடுகின்றது, அதில் மாநில காவல்துறையின் சுயகவுரமே அடங்கி இருப்பதால் வழக்கு இன்னும் வேறுதுறைக்கு மாற்றபடவில்லை.

# இந்த நூற்றாண்டில் தமிழக காவல்துறைக்கு விடபட்ட பெரும் சவால் அது, ராமஜெயம் தன்னைதானே கைகளை கட்டி, வாயினை கட்டி செத்துகொண்டாரா எனும் அளவிற்கு செட் செய்யபட்ட கொலை அது,

# தா.கிருட்டினனின் கொலை வழக்கு என்ன ஆனது? அருவாளோடு வாக்கிங் சென்ற அவர், தடுக்கி விழுந்து அரிவாளில் விழுந்து செத்தார் எனும் அளவிற்கு ஆனது நிலை.

# ஆனால் கொலையாளிகளை விசாரிப்பவர்கள் மனிதர்கள், மறைத்துவிடலாம், தெய்வம் நின்று சொல்லும் அல்லவா? தப்பவே முடியாது, இந்த வழக்குகளில் தப்பித்தாலும் இன்னொரு வழக்கில் சிக்கும் பொழுது எல்லா உண்மைகளும் வெளிவரும்

# ஏராளமான மர்ம வழக்கு மர்மங்கள் இப்படித்தான் விளங்கின, தமிழகத்தில் கொல்லபட்ட பத்மநாபா கொலையின் முடிச்சு, ராஜிவின் கொலைக்கு பின் தானாக அவிழ்ந்தது, அது திமுக அரசு போட்டு வைத்த முடிச்சு என்பது மர்மம் அல்ல‌

# நியாயங்கள் சாகாது, உண்மைகள் தோற்காது. எந்த கொலையாளியும் தப்ப முடியாது, இது இயற்கையின் நீதி

No comments:

Post a Comment