Monday, June 20, 2016

சீமான் அக்னி பரிட்ச்சை

தேர்தலுக்கு முன் சவால் விட்டார், தேர்தல் முடிந்ததும் பணப்பெட்டி வாக்குபெட்டி என்றார், ஆனால் பித்தம் இன்னும் தெளியவில்லை என்பதை அவரின் பேட்டி காட்டுகின்றது

அதாவது திமுக வேண்டாம் என அதிமுகவிற்கும் , அதிமுக வேண்டாம் என திமுகவிற்கும் வாக்கு போட்டார்களாம் மக்கள், அதனால் இவர் தோற்றாராம்

மிஸ்டர் சைமன், ஈழபயணத்தில் கொழும்பில் உறுப்பு திருடும் கும்பல் உங்கள் மூளையினை திருடிற்றா? நீங்கள் விட்ட சவால் என்ன? அதிமுக திமுக மாற்று நானே என்றுதானே கொக்கரித்தீர்கள்? பின் இது என்ன புரியாத விளக்கம்? ஓரளவு புரிவது என்ன? மக்கள் இந்த இரு கட்சிகளையும் விட தயாராக இல்லை என்பதுதானே?


அதனை விடுங்கள் என சொன்ன உங்களை ஓட அடித்துவிட்டார்கள் என்பதுதானே?

தமிழருவி மணியன் அளவிற்கு எனக்கு வெட்கமில்லை என சொல்லவேண்டிய இடத்தில் இவ்வளவு சமாளிப்பா?

அது என்ன தோற்றோர் இயல் என்பது தோற்றோரியல் (Tutorial) ஆயிற்றா? அப்படியானால் டியூட்டர் என்பவர் தோற்றவரா? இட்லி என்பது இத்தாலிய தயாரிப்பா?

அரசியலில் நீர் Tutorial ல் இருப்பதாக நினைக்கவேண்டாம், காரணம் நீர் இன்னும் அங்கு LKG படிக்கவே தகுதியில்லாதவர்.

No comments:

Post a Comment