Wednesday, June 29, 2016

வாழ்த்துக்கு நன்றி.....

இத்தனை நூற்றுகணக்கான நண்பர்கள் வந்து பிறந்தநாளில் வாழ்த்தும்போது உண்மையிலே மனம் கலங்கத்தான் செய்கிறது.

இந்த வாழ்த்துளை பெற‌ தகுதி இருக்கிறதா என்றால் அப்படி ஒன்றும் இருப்பதாக நிச்சயம் தெரியவில்லை.

ஈழவிவாகாரம் தொடர்பாக நான் ஒன்றும் புதிதாக எழுதவில்லை, எத்தனையோ பேர் பல இடங்களில் அழுத்தமாக பதிவு செய்ததை சுட்டி காட்டினேன், மற்றபடி ஒன்றுமே இல்லை, எத்தனையோ பேர் எத்தனை ஆயிரம் விவரங்களுடன் பதிவு செய்த விஷயங்கள் அவை, இணையமெல்லாம் குவிந்து கிடக்கின்றன.

அது கிடக்கட்டும், கடல் கடந்து வாழும் ஒருவகையான அகதிக்கு இத்தனை எண்ணிக்கையில் நண்பர்கள் இருப்பதுதான் விஞ்ஞான விந்தை.

அப்படி ஒன்றும் நான் எழுதிவிடவில்லை, நினைவுகளை கொட்டினேன், வேறொன்றுமில்லை.

இது ஒரு சமூகதளம், கிராமத்து டீக்கடை பெஞ்சின் நவீன வெர்சன் தான் இது, வரலாம் பேசலாம், சண்டையிடலாம், விளக்கம் சொல்லலாம், பிடிக்காவிட்டால் கிளம்பலாம்.

ஆனால் இந்தியாவில் இன்னும் தேசாபிமானிகளும், சமூக அக்கறை உள்ளவர்களும் கொஞ்சமேனும் இருக்கின்றார்கள் என கண்டுகொண்ட தளம் இதுதான்.

உங்களின் மேலான அன்பிற்கும், நம்பிக்கைக்கும் மிகுந்த நன்றி. உங்களின் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் என்றும் ஏற்புடைவனாக இருக்கும் வரத்தினை இறைவன் நமக்கு அருளட்டும்

ஒரு கட்டத்தில் 2004ம் வாக்கில் நெடுமாறன் போன்றோர் சொன்னார்கள், இறுதிகட்ட ஈழபோரில் தமிழக இளைஞர்களும் பங்கெடுக்கவேண்டுன்று

அப்பாதகம் நடந்துவிடுமோ என்ற அச்சம் இருந்தது, ஆனால் இந்த குழுவினை போன்ற தேசபற்றாளர்களை கண்டபின் அதெல்லாம் தூளாய் மறைந்து உற்சாகம் கூடிற்று

அதுதான் மகிழ்ச்சி.

உங்களின் மேலான அன்பிற்கும், நம்பிக்கைக்கும் மிகுந்த நன்றி. உங்களின் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் என்றும் ஏற்புடைவனாக இருக்கும் வரத்தினை இறைவன் நமக்கு அருளட்டும்.

No comments:

Post a Comment