Thursday, June 23, 2016

சுப்பிரமணியன் சாமி என்பவரால் இந்த நாடு ஒரு நன்மையினையும் ஒரு காலமும் அடையாது





இந்த சுப்பிரமணியன் சாமி என்பவரால் இந்த நாடு ஒரு நன்மையினையும் ஒரு காலமும் அடையாது

ஏதோ ஒரு அந்நிய சக்தி இவரை நடத்திகொண்டிருக்கின்றது என்பது மட்டும் உண்மை

உச்சமாக இந்த தேசத்தின் பெரும் அச்சாணியான ரிசர்வ் வங்கி கவர்ணர் மீதே இவர் பாய அனுமதித்தது யார் என்பது மட்டும் தெரியவில்லை, இதன் தாக்கம் பெரிய பொருளாதார வீழ்ச்சியாக அமையலாம்.


எல்லா நாடுகளும் பெரும் வீழ்ச்சியினை சந்திக்கும் நேரத்தில், பிரிட்டனே என்ன செய்யலாம்? பவுண்டின் எதிர்காலம் என்ன? என தவிக்கும் வேளையில்வேளை, ஆனானபட்ட சவுதி அரேபியாவே அரோம்கோ எனும் உலகின் நம்பர் 1 பணக்கார கம்பெனியில் தனது பங்குகளை விற்று நாட்டை வழிநடத்தும் நிலைக்கு தள்ளபடும் இந்நேரத்தில், சீனா தன் பணமதிப்பை குறைத்துகொண்டுள்ள இந்த காலகட்டத்தில்

முக்கியமான‌ ரிசர்வ் வங்கி பொறுப்புடன் சு.சாமியினை மோதவிடுவது நல்லதல்ல, இதன் பின்னால் ஏதும் பெரும் சதி இருக்கலாம்.

# இந்திய பணம் இன்னும் வீழ்ச்சி கண்டால் அதாவது டாலருக்கு எதிராக 70ஐ தாண்டினால் இந்தியா திவாலானதாக அறிவிக்கபடும், தற்போதைய மதிப்பு 67.4

# தக்காளி என்ன? விரைவில் உப்பே கிலோ ரூ.500க்கு விற்கபடலாம், பண மதிப்பு குறைந்தால் அதுதான் நடக்கும்..அரிசி கிலோ 5 ஆயிரம், முட்டை 1000 ரூபாய்

# மிகைபடுத்துதலில்லை இந்தோனேசிய, ஜிம்பாப்வே நாடுகளில் இதுதான் நடந்தது.

# மதிப்பிழந்துவிட்ட இந்திய ரூபாய்களை வைத்து என்ன செய்ய? ஒன்று அதனை எரிக்கலாம் அல்லது பிச்சைக்காரனுக்கு 2 லட்சம் பிச்சை போட்டேன், கோயிலுக்கு காணிக்கை 10 லட்சம் போட்டேன் என பெருமையாக சொல்லிகொள்ளலாம்

# அன்றும் சொல்வார்கள் பார்த்தீர்களா? மோடி ஆட்சியில் பிச்சைகாரனுக்கு கூட லட்சக்களில் பிச்சை கிடைக்கின்றது, எல்லா மக்கள் கையிலும் கோடி கோடியாக பணமிருக்கின்றது, எல்லா மக்களையும் கோடீஸ்வரர்களாக மாற்றியது மோடி அரசு, மோடி மேஜிக்







No comments:

Post a Comment