Monday, June 20, 2016

குறு குறு செய்திகள்

யோகாவுக்கு தேசிய அளவிலும்
சர்வதேச அளவிலும் விருது : மோடி அறிவிப்பு

# எல்லா துறையினையும் சர்வதேசத்திற்கு 100% முதலீடு அறிவித்து இந்தியாவினை திறந்து கொடுத்துவிட்டு, சர்வதேச அளவில் யோகா விருதா?


# பாதுகாப்பு துறையிலும் அந்நிய முதலீடு என்றால் பினாமி வழியாக சீனாவும், பாகிஸ்தானும் நுழைய எவ்வளவு நேரமாகும்?

# யோகாவும் சமஸ்கிருதமும் அப்படி என்ன அவசியமானவை? நியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை அதனை கொண்டுதான் அறிவு வளர்த்தார்களா? யூதனும், ஜெர்மானியனும், ஜப்பானியனும் சமஸ்கிருதம் படித்தா உலகாளுகின்றனர் , ரஷ்யரும் சீனரும் யோகாசனம் கற்றா ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் குவிக்கின்றனர்? இதனை பற்றி எல்லாம் நாம் பேச கூடாது.

# பண வீக்கம் , கல்வி, உள்பட ஆயிரம் பிரச்சினைகள் இந்நாட்டில் இருக்க, சமஸ்கிருதம் யோகா என இவர்கள் கிளம்பும் ரகசியம் என்ன? நல்ல வேளையாக சிந்துசமவெளி நாகரீக பகுதி பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டது

# இல்லை என்றால் இந்திய பாராளுமன்றம் எப்போதோ அங்கு மாற்றபட்டிருக்கும்.




 


இனி நான் 365 நாட்களிலும் ஒரு வேளை சாப்பாடு தலித் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன் என்று பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறினார்.

# சாதாரண உணவகம் முதல் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு வரை சமைத்தவரின் ஜாதி சர்டிபிக்கேட் வாங்கி பார்த்தபின்புதான் இதுவரை அம்மணி சாப்பிட்டாரா?

# நாடாரை மட்டும் மிக உயர்ந்த ஸ்தானத்திலா வர்ணாசிரம தர்மம் வைத்திருக்கின்றது? நாஞ்சில் நாட்டின் தோள்சீலை போராட்டம் பற்றி தந்தையாரிடம் கேட்டாவது தெரிந்திருக்கலாம் அல்லவா?


# சொந்த வீட்டில் சாப்பிடுவதற்கு இப்படி ஒரு பில்டப்பா?




 


"கச்ச தீவினை மத்திய அரசு மூலமாக மீட்க நடவடிக்கை எடுப்பேன் என, பேசியிருக்கிறேன்; நான் ஒன்றும் படையை திரட்டிச் சென்று, கச்சத்தீவை மீட்பேன் என, பைத்தியக்காரத்தனமாகப் பேசவில்லை " : முதல்வர் ஜெயலலிதா

# என்னது படையெடுத்து மீட்பேன் என சொன்னால் பைத்தியகாரதனமா?, அப்படியானால் ஒருவன் 50 ஆயிரம் பேர் கொண்ட பட்டாலியனை உருவாக்கி கச்சதீவை மீட்பேன் என பகிரங்கமாக சொன்னானே, அவன் நிச்சயம் பைத்தியகாரனாகத்தான் இருக்கவேண்டும்.

# மாநிலம் ஆளும் முதல்வர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், எனினும் விரைவில் முதல்வர் நான் என்ன கச்சதீவினை மீட்காவிட்டால் தனியாக தமிழ்நாட்டை பிரித்துவிடுவேன் என மனநலம் பாதித்த அந்த‌ டம்மி பீஸை போல, எங்காவாது சொன்னேனா என சொல்லட்டும்


# ஆக அங்கிள் சைமன் ஒரு பைத்தியகாரன் என பலர் சொன்ன முடிவினை முதல்வர் ஆமோதிக்கின்றார், அடேய் அங்கிள் & கோ இதற்கு போராட தயாரா? ம்ஹூம் ஜே என்றால் ஒரு சத்தம் வராதே, உங்கள் ஆதங்கம் புரிகிறது, சே கலைஞர் இப்படி சொன்னால் எப்படி இருந்திருக்கும்? 2 மாதம் ஆடியிருக்கலாமே......




 


போதை மருந்து கடத்தலில் நடிகை மம்தா குல்கர்னி: கென்யாவில் கைது

# கவர்ச்சி வெடிகுண்டு என அழைக்கபட்ட மம்தா குல்கர்ணியின் பெயருக்கே மயங்கிய மக்கள் உள்ள நாடு இது, ஒரு காலத்தில் சினிமாவில் அவர் ஏற்றிய போதை அப்படி,

அந்த போதையினை விடவா மருந்து பெரும் மயக்கம் கொடுத்துவிடபோகின்றது?


# கையில் வெண்ணைய் வைத்துகொண்டு நெய்க்கு அலைந்திருக்கின்றார் பாவம், மாட்டிகொண்டார்.




எதற்கெடுத்தாலும் உங்க அம்மா, அக்க, தங்கச்சி என ஒரு மாதிரியாக பேசிகொண்டிருக்கும் இவர்களுக்கு தீர்வு தமிழ்தேசியம் அல்ல, மாறாக ஒரு செக்ஸாலாஜிஸ்ட், மாத்ருபூதம் போன்ற மருத்துவர்கள்

சேலம் சிவராஜ் வைத்தியரிடம் அனுப்பவேண்டிய கேசுகள் எல்லாம், ஈழம், தமிழ்தேசியம், சீமான் என புலம்பிகொண்டிருப்பதுதான் கொடுமை

இயலாமையில் இருக்கும் ஆண்கள் இப்படி
மனநிலை பாதிப்படைவார்கள் என சிக்மெண்ட் பிராய்டு அன்றே சொல்லி இருந்தார், அவர்கள் யாரை பார்த்தாலும் ஆபாசமாய் பேசுவார்களாம், குடிக்க தண்ணீர் கேட்டாலும் நாலு கெட்டவார்த்தையினை வீசிவிட்டுத்தான் கேட்பார்கள் என்கிறது அவரின் ஆய்வு



முதலில் சீமான் செய்திருப்பதே குழந்தை திருமணம் என்று சர்ச்சை வருகின்றது, அதனை விசாரித்து முதலில் அவனை கைது செய்யவேண்டும்

அரேபிய ஷேக்குகள் முதிர்வயதில் வறுமையான நாட்டு பெண்களை குழந்தை திருமணம் செய்வது போல, இவன் அந்த அப்பாவி சிறுமியினை தனிதமிழ்நாடு வாங்கிதருகிறேன் என சொல்லி ஏமாற்றி இருக்கலாம்

சீமானின் குழந்தை திருமணம் விசாரிக்கபடவேண்டியது.




ரஜினி நீண்ட ஆயுளோடு வாழ ரகசிய யாகம் செய்தார் ரசிகர்

# அப்பொழுதுதான் ரஜினி மீனாவின் மகள், ஐஸ்வர்யாராயின் பேத்தியுடன் எல்லாம் டூயட் பாடமுடியும், ரசிகரின் ஆவல் வெற்றிபெற வாழ்த்துங்கள்

# யாகம் என்றால் தீ எல்லாம் எரியுமே, எதனை எல்லாமோ போட்டு எரிப்பார்கள், இவரும் நிச்சயம் அருகில்தான் இருந்திருப்பார்.




சமத்துவத்தை சகோதரத்துவத்தை அமைதியினை விரும்பும் தமிழர்கள் சீமானை ஏற்க மாட்டார்கள் : கொளத்தூர் மணி

# புலிகள் பெரும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் காந்திய வழியில் உலகிற்கே சொன்னதால் இவர் புலிகளை மட்டும் தயக்கமின்றி ஏற்றுகொண்டார்.

# உங்க பிரச்சினையே புலிக்கு யார் அத்தாரிட்டி என்பதுதானே, இதற்கு ஏன் இப்படி ஒரு விளக்கம்?




 


No comments:

Post a Comment