Wednesday, June 29, 2016

நானே ராஜதந்திரி - வைகோ

"எனது ராஜ தந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது.

FB_IMG_1467267747616

என்னை அழிக்க நினைத்தார்கள், அவர்கள் அழிந்து போய்விட்டார்கள்" : வைகோ பேச்சு

# தொடர் தோல்வி ஒருவன் மனநிலையினை புரட்டிவிடும் என்பதற்கு இவரே பெரும் சாட்சி, இல்லாவிட்டால் இப்படி உளரமுடியாது, இவர் இன்னும் சுயநினைவில் பேசிகொண்டிருக்கின்றார் என்றால் இப்படியான முடிவிற்குதான் வரவேண்டி இருக்கும்

1) கரைந்துகொண்டிருக்கும் கட்சியோ, இவரை நம்பி இருப்பவர்களோ இவருக்கு முக்கியமல்ல, இவர் ஸ்டெர்லைட் முதல் அணுவுலை போராடிய எல்லாமும் நாடகமே, கூட்டணி அமைத்ததும் கலைஞர் எதிர்ப்பே அன்றி வேறு அல்ல‌

2) இந்த தேர்தலில் அழிநிலையில் இருப்பது நிச்சயமாய் விஜயகாந்த் அன்றி கலைஞர் அல்ல, மிக சொற்பமான எண்ணிக்கை வித்தியாசத்தில் எந்நேரமும் ஆட்சியினை கைபற்றும் வலு அவருக்கு இருக்கின்றது.

3) "எம்மை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தார்கள்.." எனும் இடத்தில்தான் இருபொருள் வருகின்றது, அது கட்சி தொடங்கி வைகோவினை பாதித்த விஜயகாந்தா? அல்லது இறுதிவரை நம்பிக்கை கொடுத்து தவறான வழிகாட்டலில் அழிந்துபோன புலிகளின் எச்சரிக்கையா? என தெரியவில்லை, அழிந்து போனது புலிகளும், விஜயகாந்துமே, ஆக இவர் குறிப்பிடுவது யாரை என்றுதான் தெரியவில்லை.

4) சொந்த கட்சியினரை விட, இவரை இறுதிவரை நம்பி அழிந்த புலிகளை விட, புலிகளுக்காக இவரை உள்ளே தள்ளி பெண்ட் எடுத்த ஜெயலலிதாவினை விட, தன்னை வளர்த்து ஆளாக்கி அடையாளமிட்ட கலைஞர் மீதுதான் இவருக்கு இன்னும் வன்மம் என்றால், வள்ளுவன் வாக்கு பொய்க்குமா?

"எந்நன்றி கொன்றாருக்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்க்கு"

இது வைகோ, பிரபாகரன் என இருவருக்கும் பொருந்தும், செய்நன்றி அழித்தார்கள், தானாய் அழிந்தார்கள்.

No comments:

Post a Comment