1956ல் ,மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது எல்லை சர்ச்சை தொடர்பாக , தமிழக முதல்வர் காமராஜர் சும்மா இருக்கலாம்.
1964ல் , சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தப்படி 5 லட்சம் தமிழர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடிவெடுத்த போது , தமிழக முதல்வர் பக்தவச்சலம் சும்மா இருக்கலாம்.
1987ல் , ராஜீவ் - ஜெயவர்த்த ஒப்பந்தப்படி இலங்கைக்கு IPKF அனுப்பப்பட்டபோது , தமிழக முதல்வர் எம்ஜிஆர் சும்மா இருக்கலாம் .
ஆனால் , 1974 ல் இந்திரா - சிரிமாவோ ஒப்பந்தப்படி கச்சத்தீவை இலங்கைக்கு தந்தபோது மட்டும், தமிழக முதல்வர் கலைஞர் தீக்குளிச்சாவது தடுக்கணுமோ, எங்கள் கலைஞர் என்றால் இளக்காரமா? ஏய் விடமாட்டோம் என ஒரு உடன்பிறப்பு கர்ஜிக்கின்றது
அன்பரே,
கலைஞரின் அரசியல் தொடக்கம் எதன் அடிப்படையானது, இப்படி காமராஜரும் பக்தவக்சலமும் தமிழக எதிரிகள், நான் இருந்திருந்தால் நடப்பதே வேறு என தோள்தட்டி அரசியல் செய்தது தான் கலைஞரின் தொடக்கம், மறுக்க முடியுமா?
காமராஜர் செய்ததது எல்லாம் தவறு, தமிழர் விரோதம் என ஒப்பாரி வைத்து ஆட்சியினை பிடித்தவர்தான் கலைஞர்.
அப்படி காமராஜர் செய்தது சரி என்றால் இவர் அவரையே ஆளவிட்டிருக்கலாம் அல்லவா? அவர் செய்தது தவறு என சொல்லிதானே இவர் ஆட்சிக்கே வந்தார்?
எம்ஜிஆரை இவர் கேட்ட கேள்வி கொஞ்சமா?
சரி அவர்கள் செய்தது சரி என்றால் இவர் ஏன் குறை சொன்னார்?
அவர்கள் செய்தது தவறு என்றால், இவரும் அதே தவறை செய்தால் என்ன அர்த்தம்? இதற்கு காமராஜைரையே ஆளவிட்டிருக்கலாமே, இவர் என்ன முல்லை பெரியாரை மீட்டாரா? அல்லது 5 லட்சம் மலையக மக்களை ஈழத்திற்கு அனுப்பி காமராஜர் செய்த தவறை சரியாக்கினாரா? இல்லை அல்லவா?
அப்படியானால் இவர் பொய் சொல்லி ஆட்சியினை பிடித்தாரா? அதாவது நல்லாட்சி நடத்திய காமராஜைரையும், பக்த வக்சலத்தையும் கலைஞர் பொய் சொல்லி பழி சுமர்த்தி இருக்கின்றார் இல்லையா?
அதனால்தானே அவர்கள் வழியில் அமைதியாக இருந்திருக்கின்றார், அதனைத்தானே சொல்ல வருகின்றீர்கள்?
No comments:
Post a Comment