ஹாவர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பது தொடர்பாக பெரும் முயற்சிகள் எடுக்கபட்டு கொண்டிருக்கின்றது, நிதி உதவி கோரபட்டு ஆர்வமுள்ள சிலர் உதவிகொண்டிருக்கின்றனர்.
இதற்கெல்லாம் உதவிகொண்டிருப்பவர்கள் மிக சிலர்தான், ஆனால் தெளிந்த சிந்தனையாளர்கள், எது சாத்தியம் என அறிந்தவர்கள், தமிழின் எதிர்கால நிலைகொண்டு செய்யபடும் மிக நல்ல முயற்சி இது, தமிழரின் கடமை இது.
ஆனால் இதெற்கெல்லாம் பெரும் வரவேற்பு இருக்குமா என்றால் இருக்காது, அங்கிள் சைமன் போன்றோர் அறவே சாத்தியமில்லா விஷயத்திற்கு நன்கொகொடை கேட்டால் நிறைய வருகின்றது, அவர் செவ்வாய் கிரகத்தில் தமிழீழ் செவ்வாய் திட்டம் என்றாலும் யோசிக்காமல் கொடுக்கின்றார்கள்.
உண்மையில் தமிழுணவாளர்கள் செய்யவேண்டியது இந்த ஹாவர்டு பல்கலைகழக தமிழிருக்கைக்கு உதவ வேண்டியதே தவிர, சீமானை அழைத்து மேடை போட்டு, பிரபாகரன் படம்போட்டு அட்டகாசம் செய்வது அல்ல
# தமிழுணர்வு என்றாலே பிரபாகரனை ஆதரிப்பது, சீமானை கத்தவிடுவது, முன் இருந்து விசிலடிப்பது என்ற நிலைக்கு தமிழன் சென்றிருப்பது பெரும் பரிதாபம், இந்த போதையிலிருந்து தமிழனை மீட்டல் வேண்டும்.
No comments:
Post a Comment