இதே கலைஞர் அரசு என்றால் வைகோ சீற்றம், ராமதாஸ் முணகல், திருமா அலறல், சீமான் "என் உறவே..." என பிளிரல், திருமுருகன் காந்தியின் விவர அறிக்கை, மத்திய அரசு மீது தாக்குதல், "தமிழினி துரோகி கருணாநிதி" என கடும் அமர்க்களம் நடந்திருக்கும்,
இன்று என்ன நடக்கின்றது? ஜெயலலிதா அரசு எனும் பேச்சே இல்லை, மோடி அரசு எனும் சத்தமே இல்லை, எல்லாம் ஏதோ பொந்திற்குள் தலையினை இட்ட தவளையினை போல "அரசு அனுமதி" என முணகிகொண்டிருக்கின்றன, அதனை முழுமையாக கூட முணக முடியாததுதான் பரிதாபம்.
ஆக உங்களை எல்லாம் பேச சொல்லி சுதந்திரம் கொடுத்து பிரபலமாக்கியது கலைஞர்தான் என உணர்ந்துகொண்டு திருப்பெரும்புதூர் வாசலில் இருந்து ஊர்வலம் தொடங்கி கோபாலபுரத்து வாசலில் மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவிடுங்கள்.
எங்கே மானமும் வீரமும் மிக்க, ஒரு நல்ல தமிழ் தகப்பனுக்கும் தாய்க்கும் பிறந்திருந்தால் இப்படி சொல்லுங்கள் பார்ப்போம்
"தமிழினி துரோகியான, 7 தமிழர் உயிர்குடிக்க தயாராகும் ரத்தவெறி பிடித்த, தமிழருக்கு பெரும் துரோகம் செய்துகொண்டிருக்கும் வந்தேறி கன்னட ஜெயலலிதாவினை எதிர்த்து இம்மண்ணில் புரட்சி வெடிக்கும்.
எம் தமிழர்களை வெளியிட இந்த வடநாட்டு மோடி யார்? எவன் கொடுத்த அதிகாரம்?, இந்த கன்னட ஜெயலலிதா யார்? எவன் இவர்களுக்கு அடங்குவான்? அடங்க மாட்டோம், மண்டியிடா மானம்
இன்னும் கொஞ்சநாளில் இந்த வந்தேறி அரசினை மாற்றுவோம், 7 தமிழரை விடுவிப்போம்"
என சொல்லிபாருங்கள் பார்க்கலாம்.
(ஒரு மோட்டார் பைக்கினையே அரசினை மீறி இயக்கமுடியாத நீங்களா ராஜபக்சேவினை தண்டித்து, கட்சதீவினை மீட்டு, அகண்ட ஈழம் அமைத்து, ......................
இதில் சிறை உடைப்போம் என சவுடால் வேறு..)
மங்குணிகள் இப்படித்தான், கலைஞரும் காங்கிரசும் என்றால் சீறுவார்கள், மோடியும் ஜேவும் என்றால் கண்களை மலங்க மலங்க விழித்துகொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டிருப்பார்கள்
ஆக உங்களுக்கு வேலை கொடுக்க கலைஞர்தான் முதல்வராக வேண்டும் இல்லையா? இதற்காகவாவது அடுத்தமுறை அவரை முதல்வராக்குங்கள்
நான் என்ன சொல்வது, நீங்களே அந்த முடிவில்தான் இருப்பீர்கள்.
No comments:
Post a Comment