Thursday, June 23, 2016

சீமான் பிரபாகரன் சந்திப்பு.....

"சுற்றி குண்டுமழை .எந்நிமிடமும் குண்டுவிழுந்துகொண்டிருந்தது, எப்பொழுதும் மரணம் வரலாம், நானும் அண்ணன் பிரபாகரனும் ஓடி ஓடி பேசிகொண்டிருந்தோம் (? :) ), அந்த 3 மணிநேரத்திலும் எம்.ஜி.ஆரை பற்றித்தான் பிரபாகரன் பேசினார்" - சீமான்

‪#‎ ராசா‬..பிரபாகரனை நேரடியாக ராணுவம் தாக்க தொடங்கியது 2009 தொடக்கத்தில், நீங்கள் அமைதிகாலத்தில், அப்பொழுது எங்கு குண்டு விழுந்தது நீங்களும் அவரும் ஓடி ஓடிபேசினீர்கள்?

#‎ பாதுகாபான‬ நிலத்தடி மாளிகையில் வசித்தவர் அவர், அப்படி ஒரு வீடு இருப்பது புலிகளின் இரண்டாம் நிலை தளபதிகளுக்கே தெரியாது, அப்படி இருக்கையில் எந்த காட்டில் இருவரும் ஓடினீர்கள்?

# அப்படியே ரகசிய ஆப்ரேசனை சிங்களராணுவம் நடத்தியது என வைத்துகொண்டாலும், புலிகளுக்கு கட்டளைபிறப்பிக்காமல் உங்ளுடன் ஓடி ஓடி "எம்.ஜி.ஆர் வாழ்க" என சொல்லிகொண்டிருந்தாரா? அவர் என்ன மாவட்ட செயலாளாரா?

# ராணுவம் சுற்றி தாக்கியது அல்லவா? நீர் எப்படி 3 மணிநேரத்தில் தப்பிவந்தீர்கள், ஒருவேளை பாக் நீரிணைப்பை நீந்திவிட்டீர்களா?

# எனினும் இதைகேட்டும் ஒரு கூட்டம் சிந்திக்காமல் கைதட்டுகிறது அல்லவா? அவ்வளவுதன் அவர்கள் புலிகளின் போர்முறையை புரிந்துகொண்ட லட்சணம்.

No comments:

Post a Comment