Thursday, June 30, 2016

ஈழ தமிழர் நலன் பற்றி பேச வடக்கு மாகாணா முதல்வர் விக்னேஸ்வன் யார்? என்ன உரிமை : சீமான்

ஈழ தமிழர் நலன் பற்றி பேச வடக்கு மாகாணா முதல்வர் விக்னேஸ்வன் யார்? என்ன உரிமை : சீமான்

வடக்கு கிழக்கு மாகாண நாடாளுமன்ற பிரதிநிதிகளை மக்களின் பிரதிநிதிகளாக ஏற்க முடியாது : திருமுருகன் காந்தி

# இது ஒருவகை வியாதி, அவர்கள் மாகாண முதல்வர் அந்த மக்களால்தான் தேர்ந்தெடுக்கபட்டிருக்கின்றார், அந்த நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்ததும் அம்மக்களே, அவர்கள் எல்லாம் பிரதிநிதிகள் அல்ல என சொல்ல இவர்கள் யார்?

# ஒரு அந்நியநாட்டின் உள்புகுந்து அவனுக்கென்ன உரிமை? இவனுக்கென்ன உரிமை? என பேசமுடியுமா?, இவர்கள்தான் ஐ.நாவில் முழங்க போகின்றார்களாம், சர்வதேசம் சிரிக்காதா?

# இதே யாழ்பாணத்தில் அதிக வோட்டு வாங்கியவன் ராஜபக்சே, அன்று நடந்த யாழ்பாண விளையாட்டரங்க விழாவில் மைத்திரிபாலாவிற்கு கொடுக்கபட்ட வரவேற்பு கொஞ்சமல்ல, அதாவது அவர்களே ஒரு இணக்கபாட்டில் இருக்கும் போது இங்கிருந்து இவர்கள் கத்துவது ஒரு வகை கயவாளித்தனம்

# இவர்கள் சொல்லவருவது என்ன? டேய் தயவு செய்து சண்டை போட்டு சாவுங்கள், செத்துகொண்டே இருங்கள், அதனை வைத்துதான் நாங்கள் இந்திய எதிர்ப்பினை தமிழகத்தில் விதைத்துகொண்டே இருக்கமுடியும், அது செழித்து வளர்ந்தால்தான் தமிழகத்தை ஈழம் போல தலைவன் வழியில் சுடுகாடாகா மாற்றமுடியும், பிளீஸ் சண்டை போடுங்கள், சாவுங்கள்................

# இன்னும் கொஞ்சநாளில் பைத்தியம் முற்றிபோய் கொழும்பு இலங்கை தலைநகராக இருப்பதை ஏற்க முடியாது, கதிர்காமத்தில் முருகன் கோயில் இருப்பதை ஏற்க முடியாது, இலங்கை சுற்றி இருக்கும் கடலை ஏற்க முடியாது என இவர்கள் நிச்சயம் உளறுவார்கள்

No comments:

Post a Comment