Wednesday, June 29, 2016

தொடரும் கொலை, தற்கொலை.....

தொடரும் கொலை, வெட்டு குத்துக்களால் சென்னையில் சட்டம் ஒழுங்கு என்ன ஆனது , மார்பிங் பட விவகாரத்தில் காவல்துறை வினுபிரியாவினை சாக விட்டது ஏன்? என வழக்கம் போல கலைஞர் முந்திகொள்ள, தூக்கத்திலிருந்த ஒவ்வொருவரும் நெட்டிமுறித்து எழுகின்றார்கள், தமிழிசை கடும் அறிக்கை விட்டிருக்கின்றார். குஷ்பூவினை பேச வைத்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்திருக்கின்றது

FB_IMG_1467190505811

ஆனால் தமிழனை எந்த மூலையில் அடித்தாலும் உடனே அண்ணன் பிரபாகரன் படத்தினை வணங்கிவிட்டு ஓடிபோய் அடித்து காப்பாற்றுவேன் என சீறும் சீமானை காணவில்லை, அவர் கருத்துபடி தமிழகத்தை தவிர தமிழன் எங்கு அடிபட்டாலும் ஓடுவார், சென்னை நுங்கம்பாக்கம் தமிழகம் இல்லை என்பதால் அன்னார் அமைதி

இல்லாவிட்டால் அவ்வளவுதான் அண்ணன் பாணியில் தற்கொலை தாக்குதல் நடத்துவார், இல்லை இவர் கத்தல் தாங்க முடியாமல் கொலையாளியே தற்கொலை செய்வான்.

50 ஆயிரம் போலிசாரை அனுப்பி கச்சதீவினை மீட்பேன் என சவுடால் விட்டவருக்கு, கூட 100 போலிசை போட்டு சென்னையினை காப்பீர் தாயே என சொல்ல தோன்றவில்லை என்பது மகா விசித்திரமே.

இவரை போலவே ஈழ தமிழர்களின் இனபடுகொலைக்காக போராடும் திருமுருகன் காந்தி என்பவரையும் காணவில்லை, அவருக்கு சென்னையிலும் தமிழகத்திலும் சாவதெல்லாம் தமிழர்கள் என கண்ணுக்கு தெரியாது, வங்க கடலுக்கு அப்பால் செத்தால்தான் அவன் தமிழன்.

தமிழக கட்சிகள் எல்லாம் தைரியமாக போராடும் அளவிற்கு வந்துள்ளன, அதாவது ஜனநாயக முறையில் அரசை வற்புறுத்த கிளம்பிவிட்டன, ஆயிரம் அரசியல் இருந்து தொலையட்டும்,

ஆனால் கோரிக்கை நிச்சயம் அர்த்தமுள்ளது

இப்படியாக தமிழக மக்களுக்கு இவர்கள் போராடும் போது, ஈழ குத்தகையாளர்கள், ஒப்பந்தக்காரர்களை காணாவில்லை, வை,கோ எனும் கோயபல்ஸ் மட்டும் ஸ்வாதி கொலைக்கு மது ஒரு காரணம் என்றார்.

கொலையாளி இன்னும் தெரியாது, அப்படியானால் ஸ்வாதி குடித்துவிட்டு தன்னைதானே வெட்டிகொண்டாள் என்றா சொல்லவருகின்றார் இந்த கோயபல்ஸ்

மொத்தத்தில் இந்த ஈழ வியாபாரிகள் கூட்டமைப்பின் உண்மை முகம் கலைகின்றது, தமிழரின் நலம் இவர்களுக்கு முக்கியமே அல்ல, ஈழ மக்களை வைத்து அரசியல் செய்வதும் அதன் மூலம் காங்கிரசையும், கலைஞரையும் வசைபாடும் ஒரு கூலிப்படை மட்டுமே தவிர கொள்கையோ மக்கள் நலமோ இவர்களுக்கு இல்லை.

இதே ஸ்வாதியின் தந்தை முன்னாள் புலியாகவோ , பிரபாகரன் உடன்பிறப்பாகவோ அல்லது மேல்நாட்டில் புலி ஆதரவாளராகவோ இருந்திருந்தால் இந்நேரம் சென்னையில் என்ன நடக்கும் என்கின்றீர்கள்?

இவர்கள் தத்துவம் மிக எளிதானது, தமிழனை தமிழகத்தில் தமிழன் கொல்லாமல் யார் கொல்வார்கள்? இன்னொருவன் கொன்றால்தான் நாங்கள் கொதிப்போம்.

இதனைத்தான் இவர்கள் உயர்த்திபிடிக்கும் புலிகள் ஈழத்தில் செய்துகொண்டிருந்தனர், அதனால் இதெல்லாம் இவர்களுக்கு பிரச்சினையாகவே தெரியாது.

No comments:

Post a Comment