Thursday, June 30, 2016

பெலாரஸ் : நாடும் மக்களும்

பெலாரஸ் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நிலை அப்படித்தான் இருக்கின்றது,

மக்கள் கவுரமான வேலைகளை நாடாமல் வியர்வை சிந்தும் வேலைகளையும் செய்யவேண்டும் என பொருள்படும் வகையில், அதாவது கோர்ட் சூட்டுகளை களைந்து கடும் உழைப்பு கோரும் விவசாயம் போன்ற‌ வேலைகளுக்கும் செல்லவேண்டும் என்ற வகையில் கோரிக்கை வைத்தார் அதிபர்.

FB_IMG_1467284714432

வியர்வையால் நனையட்டும் உங்கள் ஆடை, அதனை கழற்றி வைக்கும் அழவிற்கு வியர்வை சிந்த நீங்கள் உழைக்க வேண்டும் என ஏதோ சொல்லிவிட்டார்

அவ்வளவுதான், உத்தரவு எஜமான் என சொல்லிவிட்டு ஆடைகளை துறந்துவிட்டு அலுவகங்களில் வேலை பார்த்து அதிபர் முகத்தில் கரி பூசுகின்றார்கள் பெலாரஸ் மக்கள். அதிபரை கேவலபடுத்துகின்றார்களாம், அதிபர் வெளியில் தலை காட்டமுடியாமல் தவிக்கின்றார்.

அவர்கள் சும்மா இருந்தாலும் பரவாயில்லை, தங்கள் போராட்டத்தை இலை மறை கோலமாக இணையமெங்கும் பரவவிட்டிருக்கின்றராம், சில நாடுகளில் பெலாரஸ் நாட்டு தூதரகம் சாத்தபடும் நிலையாம், விவரம் தெரிந்தவர்கள் உங்கள் நாட்டு பணியாளர்கள் எல்லாம் ஆடையின்றி பணி செய்கின்றார்களாம், நீங்கள் அந்த நாடு இல்லையா என கேட்டால் என்ன செய்ய?

பெலாரஸ் நாடு அப்பாடு படுகின்றது

இந்திய திரு நாட்டில் இதெல்லாம் அறவே சாத்தியமில்லை (நாம் வாங்கிய வரம் அப்படி :), இதற்குத்தான் ஐரோப்பா செல்ல்வேண்டும் என்பது )எனினும், ஒருவேளை அந்த மாநிலத்தில் அவர்கள் தலைவர் இப்படி ஒரு அறிக்கை விட்டிருந்தால் நிலமை எப்படி இருந்திருக்கும்?

கட்சியினர் உடனே என்ன செய்வார்கள் என சொல்லி தெரியவேண்டியதில்லை, அது கர்ணன் போல உடலோடு ஒட்டிய கவசமானாலும் கிழித்து எடுத்துவிடுவார்கள்

ஆனால் தலமை சொல்லுக்கு கட்டுபட்டு செய்த மகிழ்ச்சியில் திளைப்பார்கள், கூடவே சன்னி லியோனையும் கட்சியில் சேர்த்தால் ஏக விளம்பரம்.

No comments:

Post a Comment