Tuesday, June 21, 2016

யூதர்கள், தனி நாடு அடைய என்ன செய்தார்கள்?

ஹிட்லரால் பாதிக்கபட்ட யூதர்கள், தனி நாடு அடைய என்ன செய்தார்கள்? அவர்கள் உலகெல்லாம் பரவி இருந்த காரணத்த்தால் ஹீப்ரு மொழியினை தூசு தட்டி அதனை படிக்கசெய்து மொழியால் ஒன்றிணைந்து இஸ்ரேல் அடைந்தார்கள், ஆக மொழிதான் அவர்களுக்கு நாடு கொடுத்தது : இப்படி ஒரு நண்பர் பதிவிட்டுருக்கின்றார்

இதனை விட பெரும் கொடுமை வரலாற்று சாவு இருக்கமுடியாது

காரணம் அப்படி யூத மொழி முக்கியம் என்றால் ஆபிரிக்காவின் உகாண்டா பக்கமோ அல்லது தென் அமெரிக்கா பக்கமோ அந்நாளைய ஐநா ஏற்பாட்டை ஏற்றுகொண்டு என்றோ மொழிவளர்க்க போயிருப்பார்கள்,


அந்நாளைய ஐரோப்பிய நாடுகளின் யோசனை அப்படித்தான் இருந்தது, பாலஸ்தீனை பிரிக்க முதலில் யாருமே தயாரில்லை, அது தேவை இல்லா விஷயமாக இருந்தது

ஆனால் அவர்களுக்கு தேவை அந்த ஜெருசலேம், அந்த ஆலயம், அதுதான் அவர்கள் ஆன்மா, அவர்கள் உயிர்

அதற்காக பெரும் போராட்டம் நடத்தி இஸ்ரேலுக்கே வந்தார்கள், நிலவங்கி நடத்தி நிலம் வாங்கினார்கள், அகதிகளாய் வந்தார்கள், கிபூட்களாய் மாறினார்கள், நடக்க முடியா அதிசயமாய் நாடு அடைந்தார்கள்

அந்த ஆலயவெறி, சுருக்கமாக சொன்னால் மதவெறிதான் அவர்களை இஸ்ரேல் பால் தள்ளிற்று, புறக்காரணி அரேபிய எண்ணெய் வளத்தை சுரண்ட அமெரிக்காவிற்கு ஒரு அடியாள் தேவை, அங்கு பதற்றம் ஏற்படுத்திகொண்டிருக்க ஒருவன் தேவை

இப்படியான காரணிகளால் அமைந்து, பின் சோவியத் மறைந்ததும் பாலஸ்தீனம் என்றொரு நாட்டையே இல்லாமல் செய்துகொண்டிருக்கும் நாடுதான் இஸ்ரேல்

இன்றும் என்ன செய்கின்றார்கள்? பழமையான அல் அக்சா மசூதியினை இடித்துவிட்டு யூத ஆலயம் அமைக்க தயாராகின்றார்கள், முல்லை பெரியாரில் கேரளா சொல்லும் பொய் போலவே சொல்லிகொண்டிருக்க்கின்றார்கள்,

அவர்கள் மத சட்டம் எல்லாம் ஹீப்ரு மொழியில் எழுதபட்டவை, நாளை ஆலயம் எழுப்பிவிட்டு அந்நிய மொழியில் வழிபாடு செய்யவா? ஜகவா பொங்க மாட்டாரா? பெரும் கட்டுபெட்டி மதம் அது, அதனால் ஹீப்ரு மொழியினை தூசு தட்டினார்கள், வளர்த்தார்கள் ஆனாலும் அலுவலக மொழி எல்லாம் ஆங்கிலம்.

ஒரு இனத்தின் மதவெறியினை மறைத்து அதனை மொழிபாசமிக்க இனமாக மாற்றுவது பெரும் தவறு

உலகிலே பெரும் பயங்கரமான மதவாதிகள் அவர்கள், மதத்திற்காகவே ஒரு இனம் வாழுமென்றால் சத்தியமாக சொல்லலாம் அது யூத இனம்தான், அந்த விஷயத்தில் அது ஆயிரம் ஐஎஸ் இயக்கத்திற்கு சமம்

ஆனால் நாகரிகமான ஐஎஸ் இயக்கம், அவ்வளவுதான் விஷயம்.

எனவே நண்பர்களே, எவனாவது வந்து மொழியினை காத்த யூதன் நாடு அடைந்தான் என்றால் பேச்சுகொடுங்கள், அடுத்த வார்த்தை அவனிடமிருந்து "வா நாமும் ஈழம் அடைவோம்" என்றுதான் இருக்கும், அவர்கள்தான் இதனை கிளப்பி விடுவார்கள்

அங்கிள் சைமன் அறிவாளி என தன்னை நினைத்துகொள்வார் அல்லவா? முப்பாட்டன் முருகன் தமிழரே வாருங்கள் என அவர் அழைத்ததும் இப்படித்தான், ஆனால் அங்கிள் மறந்த விஷயம் முப்பாட்டனின் பெரும் வீடுகள் தமிழகத்தில்தான் உண்டு என்பது.

சும்மா அங்கிள் முருகனை முப்பாட்டன் ஆக்கவில்லை, இதுதான் விஷயம்.

எல்லாம் அவர்கள் சரக்கு , அங்கிள் சைமன் என்றுமே சொந்தமாக சிந்திக்காதவர் என்பது யாருக்கு தெரியாது??

2000 வருடமாக தன் கடவுளுக்கு கோயில் இல்லை எனும் யூதனின் வெறி, அவனை இஸ்ரேல் நோக்கி தள்ளியது,

ஆனால் தமிழகத்தில் முருகன் கோயிலுக்கா பஞ்சம், அங்கிள் சொல்லிபார்த்துவிட்டு ஹிஹிஹிஹி என முகத்தை துடைத்துகொண்டிருக்கின்றார்.

No comments:

Post a Comment