Thursday, June 23, 2016

ரமலான் நோன்பு...

தேர்தலை அண்மித்த ரமலான் மாதம் என்றால் தமிழக அரசியல்வாதிகளுக்கு இஸ்லாமிய நண்பர்கள் மீது பாசம் பொங்கி பாலாய் வழியும்.

முக்காடு போட்டோ அல்லது குல்லா போட்டுகொண்டோ நோன்பு துறப்பு நிகழ்வில் அசத்துவார்கள், கையில் நோன்பு கஞ்சி கோப்பையும் கரண்டியுமாக போஸ் கொடுப்பார்கள், இஸ்லாமிற்காக முகமது நபிக்கு பின் அதிகமாக உழைத்தது எங்கள் கட்சிதான் என்பார்கள், இன்னும் ஏராளமான அக்கப்போர் காட்சிகள் அரங்கேறும்

தேர்தல் சமீபத்தில் நடந்து தொலைந்தபடியால் வெற்றி மயக்கத்தில் சிலரும், தோல்வி கலக்கத்தில் பலரும் இருப்பதால் இந்த நோன்பு துறப்பு நிகழ்வில் அவர்களை காண முடியவில்லை.


கடந்த ஆண்டு இந்தியாவில் இஸ்லாமியரே இல்லாததால் உஸ்பெக்கிஸ்தான் சென்று இஸ்லாமிய மக்களோடு ரமலான் நோன்பு துறந்து வரலாற்று சிறப்பு பெற்றார் மோடி, இந்த வருடம் எந்தநாட்டிற்கு செல்வாரோ தெரியாது, சத்தமில்லாமல் "திருப்புடா வண்டிய.." என நவாஸ் ஷெரிப் வீட்டிற்குகு சென்றாலும் செல்லலாம்.

சரி அவரை விடுங்கள், தமிழக அரசியல்வாதிகளுக்கு என்ன ஆயிற்று?

# மொத்தமாக துறந்தே விட்டார்களா?

No comments:

Post a Comment