Thursday, November 17, 2016

பிரபாகரனால் ஒரு காலமும் ஈழம் அமைந்திருக்காது...




Image may contain: 1 person , sunglasses and close-up


தமிழீழம் அமைவதை பிரபாகரன் போன்றதொரு பைத்தியக்காரன் வந்து அழித்துவிட்டான் : தலமை பித்த பிக்கு ஞானசார தேரர்.


அதாவது பிரபாகரனால் ஒரு காலமும் ஈழம் அமைந்திருக்காது, ஈழம் அமைவது அவனால்தான் தடுக்கபட்டது.


இனி ஈழம் அமைய யாராவது தலையெடுத்தால் அது நடந்துவிடும், ஆகவே சிங்களர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும் என்று பேசியிருக்கின்றார்





இது உண்மையும் கூட, பிரபாகரனோடு சண்டையிட்ட காலங்களில் ஒருவகை தந்திரமாக இப்படித்தான் நாட்களை சிங்களன் கடத்தினான், உலக நிலை மாறுமட்டும் இப்படித்தான் யோசித்தான் சிங்களன்

"அதாவது இவன் நாடு கேட்கின்றான், பல பேர் சேர்ந்து இப்படி கேட்டால் சிக்கல்தான், ஆனால் இன்னொரு தமிழ் குழு சிங்கள எதிர்ப்புக்கு வரமால் பார்த்துகொள்கின்றான்

பெரும் எதிரியான பலமான இந்தியாவினையும் இலங்கை பிரச்சினையிலிருந்து விரட்டியவன் அவனே, அவன் இருக்கும் வரை ஈழ விவகாரத்தில் இந்தியா தலையிடாது,

ஆகவே இவன் இருக்கும் வரை சண்டையும் பேச்சுவார்த்தையும் மாறி மாறி நடக்குமே அன்றி ஈழம் அமையவே அமையாது, பிரபாரன் இருக்கும் வரை அமையாது"

பிரபாகரனை எவ்வளவு அழகாக கையாண்டு பிரிவினையினை தவிர்த்திருக்கின்றது இலங்கை என சிந்தித்தால் உங்களுக்கு புரியும்.

அப்படி சிங்களனுக்கு தன்னை அறியாமல் துணை சென்றவர்தான் பிரபாகரன்

சும்மா அல்ல கிட்டதட்ட பல லட்சம் மக்கள் உயிரோடு அவர் துணைபோனதுதான் கொடுமை, இதனை சொன்னால் நாம் துரோகி.

இத்தனை பெரும் அழிவில் லாபம் யாருக்கு?

நிச்சயம் சிங்களனுக்கு, இதில்தான் அவர்கள் பிரபாகரனை வித்தியாசமாக கையாண்டார்கள். பல வருடங்களாக இலங்கையில் புலிகளுக்கு தடை இல்லை என்பதே பெரும் உதாரணம்

ஏன்? புலிகளுக்கு தடை இல்லை

புலிகள் இல்லை என்றால் இன்னொருவன் போராட வருவான், வந்தால் புலிகளை போல் ஆயுதம் மட்டுமல்லாமல் வேறு வழியில் போராடுவான் சமாளிப்பது மகா சிரமம், புலி அப்படி அல்ல, சுடுவான் நாமும் திருப்பி சுட்டால் விளையாடிகொண்டே இருக்கலாம்.

பல எதிரிகளை உருவாக்குவதை விட, இருக்கும் ஒரே ஒரு எதிரியினை அப்படியே விடுவது நமக்கு நலம். இனி எதிரிகள் உருவாக மாட்டார்கள் எனும் நிலை வரும்பொழுது இவனை அழித்துவிடலாம்,

அதுவரை இவனை விட்டு வைப்பதே நமக்கு நலம், காரணம் இவன் இருக்கும் வரை இன்னொரு போராளி குழுவோ, இந்தியா போன்ற அந்நிய நாடோ உள்ளே வராது,

எப்படிபட்ட பாதுகாப்பு, வீணாக்கலாமா?

வாய்ப்பு கிடைக்கும்பொழுது தமிழர் மறக்க முடியா அடிகொடுத்து, முதுகெலும்பினை முறித்து இன்னொருவன் துப்பாக்கி தூக்க நினைக்க முடியாதபடி, ஈழ விடுதலை பேசமுடியாதபடி அடிக்கவேண்டும், மறக்கமுடியாத அடி கொடுக்கவேண்டும், அதில் எழும்பவே கூடாது

பெரும் ராஜதந்திரமிக்க திட்டம் இது.

இந்த நோக்கிலேதான் உலக நிலவரம் மாறும் வரை இழுத்தார்கள், உலகளாவிய தீவிரவாத தடை வரும்பொழுது மொத்தமாக வஞ்சம் சாத்தினார்கள்.

இனி இன்னொருவன் ராஜதந்திரமாக எழும்பிவிட கூடாது, அவன் பிரபாகரனை போல பைத்தியமாக இருக்கமாட்டான், அது நாட்டு பிளவிற்கு கொண்டு செல்லும் என எச்சரிக்கின்றார் இந்த பிக்கு

மகனே பிக்கு பொறு, பிரபாகரனை போல அல்லாமல் ஒரு நல்ல ராஜதந்திரமிக்க ஈழதலைவன் வரும்பொழுது நிச்சயம் இலங்கை பிய்ந்து ஈழம அமையும், குறைந்தப்ட்சம் சுயாட்சியாவது கொண்டிருக்கும்.

அன்று இருக்கின்றது உனக்கு, அங்கிள் சைமனோடு சேர்த்து















No comments:

Post a Comment