Tuesday, November 22, 2016

எம். ஆர். ராதா தீர்க்க தரிசனம் ...

https://youtu.be/9NqdazZZ30c


திரைக்காட்சிகள்  தொகுப்பு : காணொளி


எதற்கெடுத்தாலும் அம்பானி, அதானி என பலர் புலம்பிகொண்டே இருக்கின்றார்கள்


இதனை பார்க்கும்பொழுது தலைவன் எம்.ஆர் ராதா காட்சிதான் நினைவுக்கு வருகின்றது


தலைவரிடம் ஒருவன் பாலிடிக்ஸ் பேசுவான், உன் வீடு யார் கட்டியது, ஒரு தொழிலாளி கட்டியது


தலைவர் சொல்வார் ஒரு பயலும் சும்மா வேலை செய்யல, சாயங்காலம் சல்லிய எண்ணிகிட்டுத்தான் போறான்" என்றாலும் கடும் கோபமாக கத்துவான் தொழிலாளி


வழக்கமான ஸ்டைலில் தலைவர் முணங்குவார் "எல்லா நாடும் தன்ன பணக்கார நாடாக்கணும்ணு பாடுபடுது, இந்த நாட்டில இருக்கிறதே 2 மூணு பணக்காரன், அவனுகளையும் பிச்சக்காரனா ஆக்கணும்னு சிலபேர் சுத்துறானுக. என்ன மக்களோ"


அப்படித்தான் பலர் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், இப்பொழுதெல்லாம் டாடா, பிர்லா இன்னும் ஹின்டுஸ்டான் லீவர் போன்ற‌ ஐரோப்பிய நிறுவணங்களை எல்லாம் விட்டுவிட்டார்கள்.


ஒரே சத்தம் அம்பானி, அதானி


சரி அம்பானியோ அதானியோ கட்சி தொடங்கவில்லை, சினிமாவில் நடிக்கவில்லை, கள்ள கடத்தலோ, தங்க கடத்தலோ, கள்ள சாராயமோ காய்க்கவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை மாறாக உழைத்தார்கள், பலபேருக்கு வேலை கொடுத்தார்கள்


கணக்கற்ற மக்களுக்கு வேலையும் வாழ்வும் கொடுத்தார்கள்


அப்படி அம்பானி அதானி என கரித்து கொட்டுபவர்களுக்கு, வேலையே செய்யாமல் கட்சி தொடங்கி ஏமாற்றலாம், ஆட்சி பிடித்து சம்பாதிக்கலாம் என சொல்லிகொடுத்த அண்ணா, எம்ஜிஆர், வசனகர்த்தா கலைஞர், ஜெயா எல்லாம் நினைவுக்கு வருகின்றார்களா என்றால் இல்லை, வரமாட்டார்கள்.


வேலை செய்யாமல், உழைக்காமல், வேறும் பேச்சு பேசியே, நடித்தே கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என சொல்லிகொடுத்தவர்கள் இவர்கள்தான்.


இதனையே வேலைக்கு செல்லாமல் துப்பாக்கி தூக்கியே பெரும் பணம் சம்பாதிக்கமுடியும் என செய்துகாட்டியவர்கள் வீரப்பனும், பிரபாகரனும்.


திராவிட தலைவர்களுக்கு பேச்சு, சில போராளி என சொல்லி கொண்டவர்களுக்கு துப்பாக்கி, அதிலும் திராவிட தலைவர்கள் சம்பாத்தியம் கொஞ்சமல்ல.


இவர்களின் மந்திரிகள் சம்பாதித்தை விட அதானி கம்பெனி ஊழியன், அம்பானி கம்பெனி மானேஜர் அதிகமாகவா சம்பாதித்திருப்பார்??


நத்தம் விஸ்வதாதனின் சொத்துகணக்கிற்கு அம்பானி பின்னால் உழைத்தவன் சம்பாதிக்கமுடியும்?


பின் யாரிடம் கொட்டி கிடக்கின்றது? சொல்லுங்கள் நிச்சயமாக அரசியல் கட்சியினரிடம், அவர்கள் பின்னால் சென்றவர்களிடம்.


ஆக உழைத்து உயர்ந்தவனை திட்டுவார்களாம், ஏமாற்றி பணக்காரன் ஆனவனை, அவன் பின் சென்றவனை கொடிபிடித்து வணங்குவார்களாம்.


அதானியும், அம்பானியும் திருடர்களாம். தமிழக திராவிட கட்சி தலைவர்களும் அவர்களின் அல்லக்கைகளும் மகா புனிதர்களாம்.


இதனை எல்லாம் பற்றி நாம் சொன்னால் உடனே அவர்கள் வசம் சில பட்டங்கள் இருக்கின்றது


ஆரிய அடிவருடி, மோடி ஜால்ரா, திராவிட எதிரி, இன துரோகி என ஏராளம்


சரி இருக்கட்டும்


ஆனாலும் பலபேர் அம்பானி, அதானி என சொல்லிகொண்டே இருகும்பொழுது தலைவன் எம்.ஆர் ராதாவின் வசனமே நினைவுக்கு வரும்


"இந்த நாட்டிலே எண்ணிபார்த்தா 400 பணக்காரன் கூட தேறமாட்டான், இவனுக என்னடான்னா சதா அவனுகளையே திட்டுறானுக பொறாமை பிடிச்ச பயலுக‌


ஓவ்வொருத்தன் ஒவ்வொரு நாட்ட பணக்கார நாடாக்கணும்னு படாத பாடு படுறான், இவனுக இருக்கிற பணக்கரனையும் ஒழிச்சி பிச்சக்காரனாக்கனும்னு திட்டம் தீட்டிறானுக‌


கேட்டால் சரிசமானமா வாழனுமாம், புரியாத பயலுக.."


தலைவன் எம்.ஆர் ராதா வாழ்க. அவன் சிந்தனை வாழ்க‌






 Image may contain: 1 person

No comments:

Post a Comment