Thursday, November 24, 2016

கரன்சி பிரச்சினையினை கண்டித்து பல கட்சிகள் ஆர்ப்பாட்டம்





Stanley Rajan's photo.  Stanley Rajan's photo.

மத்திய அரசின் கரன்சி பிரச்சினையினை கண்டித்து பல கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இன்று திமுகவும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தபோகின்றதாம்

அவர்கள் பெரும் போராட்ட குணம் படைத்தவர்கள். இந்தி ஆட்சிமொழி என்றால் அதன் ஆணை நகலை எரிப்பார்கள், இந்தியில் தார் பூசுவார்கள்.


மிசா காலத்திலே பெரும் போராட்டம் நடத்தியவர்கள்

முன்பு ஈழ ஆதரவு போராட்டமென்றால் (1991க்கு முன்பு) மத்திய அரசு கொடும்பாவி கொளுத்துவார்கள், இன்னும் என்னவெல்லாமோ செய்வார்கள்

ஆயிரம் கட்சிகள் தமிழகத்தில் போராடினாலும், திமுகவினரின் போராட்ட வரலாறே தனி

இப்பொழுதும் அப்படி ரூபாய் நோட்டை எரித்தல், ஆயிரம் ஐநூறு கரன்சியினை கடலில் போடுதல், கரன்சி கிழித்தல், ரூபாயினை எரித்து சோறுபொங்குதல் என படுபயங்கரமாக போராடுவார்கள் என எதிர்பார்த்தால்...

குறைந்தபடம் கரன்சியில் கருப்பு மை வைப்பார்கள் என்றும் கூட எதிர்பார்த்தால்...

அவர்கள் மனித சங்கிலி மட்டும் நடத்தபோகின்றார்களாம்,

ஒருவர் கையினை ஒருவர் பிடித்திருப்பார்களாம், உள்ளங்கையில் பணம் பத்திரமாக இருக்குமாம்

மத்திய அரசு ஏதும் சட்டம் கொண்டுவந்தால் நகல் எரிப்பார்கள், அது தமிழர் இழிவு, ஆரிய அடக்குமுறை என பயங்கர அழிச்சாட்டியம் நடக்கும்

ஆனால் அதுவே மத்திய அரசின் கரன்சி என்றால் பத்திரமாக வைத்துகொள்கின்றார்கள், அது ஆரிய கரன்சி என்றோ, தமிழனை அடிமையாக்கும் காகிதம் என்றோ சொல்லமாட்டார்கள்,

சொல்ல மனம் வராது.

"ஆரிய கூத்தாடினாலும் தாண்டவ கோனே
காசு காரியத்தில் கண் வையடா தாண்டவ கோனே"

((எவ்வளவு இருக்கின்றது, ஒரு சாம்பிளுக்கு ஒன்றிரண்டையாவது கொளுத்தலாம் அல்லவா?)











கொசுறு



அஜீத் தான் அ.தி.மு.க-வின் அடுத்த வாரிசுங்கிற விஷயத்தை யாரு ஆரம்பிச்சு வெச்சதுனு தெரியலை, கொஞ்சம் அதிமுக வரலாற்றினை படித்துவிட்டு சொல்லலாம்

நிறுவணர் எம்ஜிஆர் மிகுந்த நோய்வாய்பட்டு பொம்மையாக இருந்து அவஸ்தையுடன் இறந்தார், அடுத்த வாரிசு ஜெயலலிதாவின் நிலை என்னவென்று அப்பல்லோ இன்னும் உறுதியாக சொல்லவில்லை.

அதனால்.......


அதிமுகவின் அடுதத வாரிசு அஜித் என கிளப்பிவிட்டவன் நிச்சயம் விஜய் வெறியனாகத்தான் இருக்கவேண்டும்.













No comments:

Post a Comment