Wednesday, November 30, 2016

காதலிக்காக தாய், தங்கை, தந்தையினை கொன்ற மகன்




காதலிக்கு ரூ.2 லட்சம் செலவு செய்ததால் ஏற்பட்ட தகராறில் தாய், தங்கை, தந்தையினை கொன்ற மகன், திருபத்தூர் அருகே பரிதாப‌ சம்பவம்


இவனை எல்லாம் ஏன் குழந்தை திருடும் கும்பல் பிறந்த‌ அன்றே தூக்கவில்லை, குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் ஏன் கடத்தவில்லை?


காதலிக்காக கொலை செய்திருக்கின்றார், அதுவும் பெற்றவர்களையும், உடன் பிறந்தவர்களையும்.





இனி என்னாகும்? கொஞ்சநாளில் அப்பெண் இன்னொருவரை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாகிவிடுவார். இவரோ குடும்பத்தை அழித்துவிட்டு, தானும் அழிந்து ஜெயிலில் செட்டிலாகிவிட்டார்

தனக்குரிய அழிவினை தாங்களே பெற்று வளர்த்திருக்கின்றனர், அந்த பரிதாபத்திற்குரிய பெற்றோர்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், தாயிற் சிறந்த கோயில் இல்லை , பெற்றோரை விட தெய்வம் இல்லை என்ற கலாச்சாரத்திலும், மதத்திலும் ஊறிய இந்நாட்டில் இப்படியும் சிலர்.

ஐரோப்பாவில் ஒரு இளம்பெண் பெற்றோரின் மருத்துவ செலவிற்காக செய்ய கூடாத அறிவிப்புகளை செய்திருக்கின்றார், பெற்றோர் மீது அவருக்கு இருக்கும் பாசம் அப்படி

ஐரோப்பா கொஞ்சம் கொஞ்சமாக மன நிம்மதி, பாசம், குடும்ப உறவு என கிழ்க்கு பாணிக்கு திரும்புகின்றது

இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக சுயநலம்,பேராசை,பெற்றோரை மதிக்கா கொடுமை என திசைமாறுகின்றது.

நாடுகளின் கலாச்சாரம் மாறிகொண்டிருக்கின்றது.







No comments:

Post a Comment