மேட்டூர் நகராட்சி ஆணையாளரை பார்த்து குரைத்த நாய் அடித்துக்கொலை
அதாகபட்டது அன்னார் வாக்கிங் செல்லும் பொழுது அவரை பார்த்து நாய் குரைத்துவிட்டதாம், அது ஐந்தறிவு விலங்கல்லவா? சாட்சாத் டிரம்ப் வந்தாலும் குரைக்கும், மோடி வந்தாலும் குரைக்கும்
அப்படி இவரை பார்த்து குரைத்துவிட்டதாம், நான் ஆணையாளர் என அவர் குரைத்து சொன்னாலும் நாய்க்கு எப்படி புரியும்?
மனிதர் உடனே நகராட்சி ஊழியர்களை அழைத்து கை காட்டியிருக்கின்றார், அடித்து கொன்றுவிட்டார்கள்
விஷயம் பற்றி எரிகின்றது, நமது பத்திரிகைகள் புள்ளி கிடைத்தால் ரங்கோலி வரைவார்கள்,
ஏன்? எப்படி? என எழுதி ரசித்து,ரசித்து நாயினை கொன்ற நகராட்சி நரகாசுரன் என எழுதி தள்ளுகின்றன
விரைவில் திரிஷா தலமையிலான புளு கிராஸ் போன்றவை களமிறங்கலாம், கொடி போன்ற நடிப்பு குறையினை மறைக்க திரிஷாவே களமிறங்கலாம்
முன்பு சிலர் மொட்டை மாடியிலிருந்து நாயினை போட்டு விளையாடியது விஸ்வரூபமெடுத்த தமிழகம் இது
இப்பொழுதெல்லாம் மனிதனை விட மரங்கள், விலங்குகள் மீது மக்களுக்கு கடும் ஆர்வம் அதனால் அவருக்கு சிக்கலே
குரைத்த நாயினையே இப்படி செய்திருக்கின்றாரே, அவர் அலுவலக ஊழியர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள் :)
No comments:
Post a Comment