Thursday, November 24, 2016

புரிந்துகொண்டு வாருங்கள், ஒரு குழப்பமும் இருக்காது...



மனிதருக்கு என்ன சிக்கல் என தெரியவில்லை, கொஞ்சமேனும் ரசனை இருப்பதாகவும் தெரியவில்லை. ஒரு மாதிரி திரிகின்றார்


இது கீழ்பாக்கம் கேஸா அல்லது கோபாலபுரத்தில் வாசலில் கட்டபட்டிருந்த ஜந்து சங்கிலி அவிழ்ந்து முகநூலுக்கு வந்ததா என்றே புரியவில்லை


அதாகபட்டது அக்காலத்திலிருந்தே பெரும் போராட்டம் நடத்துவது கலைஞர் ஸ்டைல்.


அரசாணையினை எரிப்பது, எதிலும் கருப்பு மை பூசுவது என தீவிரமாக போராடிய போராளி அவர், அவ்வகையில் ரூபாய் நோட்டுகளையும் எரிப்பாரோ, கரி பூசுவாரோ என சொன்னால்


ஒரு சராசரி மனிதனுக்குள்ள சாதாரண ரசனையுமின்றி ஏய் என குதிக்கின்றார் மனிதர், மிக மிக சிரியசானவராக திரிகின்றார்


போங்கள் அய்யா, முகநூலில் கம்பு சுத்தி ஒன்றும் ஆகாது, கிடைப்பவர்களை கலாய்த்துவிட்டு நகரலாம். மற்றபடி கொள்கை, கட்சி,புரட்சி, காவல், தற்கொலைபடை எல்லாம் இங்கு சாத்தியமில்லை


பெரியாரின் தடி உம்மிடம் இருக்கின்றதோ இல்லையோ, இப்படியே புலம்பி சீரியசாக அலைந்தால் கலைஞரின் வீல்சேர் அல்லது அப்பல்லோ படுக்கை என ஏதாவது ஒன்று விரைவில் உமக்கு கிடைக்கும்


இம்மாதிரி சீரியஸ் பார்ட்டிகள் எல்லாம் சென்றுவிடுங்கள்,


அங்கே பார்த்தீர்களா, ஹேய்ய்.. இது மோடி பல்டி, இது கலைஞர் தந்திரம், இது ஜே கோல்மால், இது சீமானின் பிராடு, இது வைகோவின் பரிதாமம், இது விஜயகாந்தின் காமெடி இது திருமாவின் குருமா என ரசிக்க ஏராளம் உண்டு.


தன்னை தலைவன் என சொல்லிகொள்பவனை போட்டு ஜாலியாக போட்டு கலாய்க்கும் , எதனையுமே சிரியசாக எடுக்காதவர்கள் இங்கு இருக்கலாம்,


மகா சீரியசானவர்கள் இங்கு தேவையே இல்லை


நடிகர்களை போட்டு வறுக்கலாம், அவ்வப்போது உலக விவகாரங்களை கவனிக்கலாம்


முக்கிய செய்திகள் என்றால் இன்னொரு நோக்கில் பார்க்கலாம்


குஷ்பூ போன்ற அவதாரங்கள் என்றால் சிலாகிக்கலாம்.


உலக அரசியல் எப்படி இருக்கின்றது, அது இந்தியாவில் எப்படி எதிரொலிகின்றது என்பதை பார்க்கலாம்


எதனையும் நாம் மாற்ற முடியாது, நாமெல்லாம் புரட்சியாளர்களோ அல்லது சமூகத்தை திருந்த வந்தவர்க்ளோ அல்ல. நம்மால் முடியவும் முடியாது.


காந்தியும், காமராஜரும் திருத்தமுடியா தேசத்தையா நாம் திருத்த போகின்றோம், நெவர்.


ஆனால் சிரித்து மகிழலாம், அப்படி ஆகிவிட்டது நிலை.


பார்க்கும் விஷ்யங்களை வேறுவிதமாக பார்கின்றோம், எப்படி எல்லாம் கட்சி தலைவர்கள் ஏமாற்றுகின்றார்கள் என வேடிக்கையாக சொல்கின்றோம், அதோடு நகர்கின்றோம்


எது நம் மனதிற்கு மகா வேடிக்கையாகவும் அல்லது துக்கமாகவும் மாறுகின்றதோ அதனை பகிர்கின்றோம் , இதனை விரும்புகின்றவர்கள் கூட வரலாம்


அதனை விட்டுவிட்டு உங்கள் கட்சி விசுவாசத்தையும், உங்கள் பக்தியினையும் என்னிடம் காட்ட அவசியமில்லை


அதனை உங்கள் தலமையிடமோ, Gopal Krishnan நீங்கள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையான தலைவனின் டவுசரிடமோ முடிந்தால் அதற்குள்ளோ (அதாவது கட்சியின் செயற்குழுவிற்குள்ளோ) சென்று உங்கள் விசுவாசத்தை காட்டுங்கள்


எந்த கட்சிக்குள்ளும் சிக்காமல், எந்த தலைவனுமில்லாமல் அதே நேரம் கொஞ்சமேனும் நாட்டுபற்றோடு சிந்திப்பவன் இங்கே இருந்தால் போதும்


நான் பாஜக அல்ல, மசூதி இடித்த அந்த கட்சி எனக்கு விருப்பமானதே அல்ல., ஆனால் நாடு எனும் அளவில் மோடி எனும் பிரதமர் எடுக்கும் நடவடிக்கைக்கு ஒரு குடிமகனாக ஆதரவு உண்டு என்பது மட்டுமே நான் சொல்வது


கலைஞரை பற்றி எழுதியதால் நான் திமுகவோ, சீமானை பற்றி சாடியதால் திமுகவோ என எவனாவது இணைந்திருந்தால் நீங்களும் விலகுங்கள்


கலைஞரை பற்றி எழுத எல்லா துறையிலும் ஆட்கள் இருப்பார்கள், அவரின் சாதனை அப்படி, அதற்காக திமுக முத்திரை குத்துவது எப்படி?


எங்கள் தளபதி யார் தெரியுமா? என்பதை மு.க அழகிரியிடம் சென்று கேளுங்கள், விளக்கம் நன்றாக கிடைக்கும்


நாம் எந்த கட்சியும் இல்லை, எந்த கட்சியும் யோக்கியமும் இல்லை


கட்சி வேறு, நாடு வேறு


கட்சிகள் வரும் போகும், அவர்கள் கொள்கை வரும் போகும் ஆனால் நாடு என்பது 120 கோடி மக்களின் வாழ்வு, மூச்சு எல்லாம்


அதனால் கட்சி அபிமானம் தாண்டி நாட்டை பாருங்கள், மாநிலத்தை பாருங்கள்


அதனை புரிந்துகொண்டு வாருங்கள், ஒரு குழப்பமும் இருக்காது.


இதனை எத்தனை முறைதான் உனக்கு சொல்வது Gopal Krishnan , இனி மிதிதான்


அதனால் முன்னாள் நண்பர் Gopal Krishnan அவர்களே, மிதிக்கின்றேன், சாணி காலோடு மிதிக்கின்றேன்


ஆனானபட்ட இஸ்ரேலையும் அதன் மொசாத்தையுமே , ஏன் பிரபாகரனையுமே கிழித்து போட்டு விமர்சிப்பவர்கள் நாங்கள்,


நீ எல்லாம், உன் கட்சி எல்லாம் ச்சீ போடா...


ஓடிப்போ இத்தோடு ஒழி.










கொசுறு

லண்டனில் வாடிக்கையாளர்கள் நிர்வாணமாக அமர்ந்து மது அருந்த அனுமதிக்கும் நிர்வாண பார் ஒன்று திறக்கப்பட உள்ளது

இதற்கு எதற்கு இப்படி சிறப்பு அறிவிப்பு??, புல்லாக ஏற்றிவிட்டால் இறுதியில் தானாக அந்த நிலைக்கு சென்றுவிட போகின்றார்கள், தமிழகத்தில் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது.

ஒருவேளை குடித்து ஆடை களைந்துவிட கூடாது எனும் கவனத்தில் அங்கு குடிமக்கள் சரிவர அங்கு குடிக்கவில்லையோ, ஆடை களைந்தபின் அந்த கவலையின்றி குடிக்கலாம் என உற்சாகபடுத்துகின்றார்களோ??


இங்கே நாம் கடைசியாக செய்வதை இவர்கள் முதலிலே செய்யபோகின்றார்களாம் என்ன லண்டன் வாசிகளோ?








No comments:

Post a Comment