Tuesday, November 15, 2016

கட்சிகளின் ஆதாரமே கருப்பு பணத்திலே பதுங்கி இருக்கின்றது!

அண்ணாவிற்கு பின் எல்லாம் ஊழல், திமுகவில் கணக்குவேண்டும் என ஒற்றைகாலில் நின்றார் மா.கோ ராமச்சந்திரன், இவ்வளவிற்கும் அவர்தான் பொருளாளர்.


ஒரு பொருளாளரே கட்சியின் கணக்கு சரியில்லை என கொடிபிடித்து தனிகட்சி நடந்த விசித்திர தமிழகம் இது. சரி அவர் தொடங்கிய கட்சியின் கணக்கு வழக்கு என்ன என பார்த்தால் சில வழக்குகள் மட்டும் கண்ணுக்கு தெரிகின்றன‌.


திமுகவில் அதன் பின் சத்தமே இல்லை, ஊழலை எதிர்த்து களம் கண்ட அடிமை கட்சியிலும் அதன் பின் கட்சி கணக்கு சத்தமே இல்லை, வரவும் வராது. பன்னீர் செல்வம் சொல்லிவிடுவாரா? சொல்ல முடியுமா?




மக்களிடம் பதுங்கியுள்ள கருப்பு பணத்தினை மீட்கிறோம் என மோடி களமிறங்கி ஏதோ செய்கிறார், சரி இந்த கட்சிகளிடம் குவிந்துள்ள கருப்புபணம் எப்படி மீட்கபடும்?


கல்குவாரி,கல்வி நிலையம், மணல் என குவிந்த கருப்பு பணத்திலே இப்பொழுது கட்சியும் மீடியாவும் நடந்துகொண்டிருக்கும் தேசமிது,


ஆசிரமங்களிடமும், டிரஸ்டுகளிடமும், இயேசு வருவார் என சொல்லி சிலரிடமும் குவிந்திருக்கும் பணமும் சொத்தும் கொஞ்சமல்ல, அவைகளும் ஒரு வகை அரசியல் இயக்கமாக மாறிவிட்ட காலமிது


கட்சிகளின் ஆதாரமே அருணாச்சலம் ரஜினி பணம் போல கருப்பு பணத்திலே பதுங்கி இருக்கின்றது


இதனை எப்படி மீட்பார்களோ தெரியாது.


மீட்டுவிட்டால் மிக நன்றாகத்தான் இருக்கும், ஆனால் அதற்கு இன்னும் பெரும் நடவடிக்கை வேண்டும், சாதாரண விஷயமல்ல‌


கட்சிக்காரரான மோடி அதனை செய்வாரா?


செய்துவிட்டால் இந்த நூற்றாண்டின் மிகபெரும் புரட்சியாளர் நிச்சயம் மோடியே..



No comments:

Post a Comment