Friday, November 25, 2016

நன்றிகெட்ட தமிழரடா பிரபாகரா..

நாளை அடிப்பொடிகள் மாவீரர் நாள் என கிளம்புவார்கள், அதாவது பிரபாகரன் நடத்திய கட்டபஞ்சாயத்து இயக்கத்தின் பெயர் போராட்டம், அதில் வேறு வழியின்றி வந்து உயிர்விட்டவர் மாவீரர்


பிரபாகரனையும் அவரின் அடிப்பொடிகளையும் தவிர ஈழபோராட்டத்தில் கொல்லபட்ட இதர தமிழர்கள் சிவகுமார், குட்டிமணி குழு என்பதெல்லாம் மாவீரர் அடையாளம் அல்ல‌


பிரபாகரன் சொல்லி செத்தவர்கள் மட்டுமே மாவீரர்கள், அதாவது பிரபாரனை ஆதரித்தால் தமிழன், உணர்வாளன். அவர்களின் கட்ட பஞ்சாயத்து ரவுடியிசத்தை கண்டித்தவன் எல்லாம் வாழ தகுதியில்லா துரோகிகள்.




ஆனால் எத்தனையோ பேரினை சாக கொடுத்த புலிகளிடம், இத்தனை ஈழமக்கள் செத்திருக்கின்றார்கள் அல்லவா, அப்படி பிரபாகரனையோ பொட்டு அம்மானையோ இந்தியாவிடம் சரண்டைய சொல்லுங்கள் என்றபொழுது முடியாது என்றார்கள்.


பின் பல்லாயிரம் பேரினை மாவீராக்கிய புலிகளே வெள்ளைகொடி காட்டி சிங்களனிடம் சரணடைந்த நிகழ்வும் நடந்தது


அதனை இந்தியாவிடம் சரணடைந்தால் கூட காட்சி மாறி இருக்கும், அங்கோ எல்லாம் தலை கீழ்


ஆக மாவீரம் எல்லாம் அடுத்தவன் சாவுதான், தனக்கு என்றால் சரண்டைதல் மட்டுமே, சயனைடு கடி எல்லாம் இல்லை.


சரி இத்தனை ஆயிரம் மாவீரர்களை உருவாக்கிய அந்த கும்பல் தலைவனுக்கு எவனாவது மாவீரர் நாளில் மாலைபோட்டு அஞ்சலி செலுத்துகின்றானா என்றால் இல்லை


அட பிரபாகரா, எத்தனை பேருக்கு மாலைபோட்டீர், உமது படத்துக்கு நீர் உருவாக்கிய மாவீரர் தினத்தில் மாலை போட ஒரு பயலும் தயார் இல்லை


தமிழீழ தேசிய தலைவன், மேதகு என உன்னை சொல்லி பணம் குவிக்கும் இந்த வைகோ, சீமான் அம்மான் கூட உன் படத்திற்கு அஞ்சலி செலுத்தவில்லையே பிரபாகரா


நன்றிகெட்ட தமிழரடா பிரபாகரா..



No comments:

Post a Comment