பெரும் பிழைப்புவாதிகள் யாரென்றால் தமிழக சினிம்மாக்காரர்கள், அவர்கள் தொழில் அப்படி. கதையினை பணமாக்க எப்படி வேண்டுமானாலும் யோசிப்பார்கள்
இப்பொழுதெல்லாம் அவர்கள் வசூல் கனவு வெளிநாடு, அதுவும் ஐரோப்பா கனடா அமெரிக்கா, அங்கே தமிழர்கள் யார் அதிகம்
என்றால் ஈழதமிழர்,
போதாதா? அவர்களை குறிவைத்தே சில படங்கள் வருகின்றன
அதிலொன்று "மாவீரன் கிட்டு"
கதை என்ன கருமாந்திரமோ தெரியவில்லை, தலைப்பு இம்மாதிரி, ஈழதமிழர் கொண்டாடுவார்களாம், அந்த கிட்டுவின் பெயராம்
கிட்டு பற்றி அவரின் நன்றிகொன்ற தனம் பற்றி, ராஜிவ் சாகுமுன் அவரை 15 நாட்களுக்கு முன் வந்து பார்த்து நடித்ததை பற்றி, ராஜிவ் கொலை நடந்த பின் முடிந்தால் கண்டுபிடியுங்கள் என சவால் விட்டதை பற்றி எல்லாம் நிரம்ப பார்த்தாகிவிட்டது
அந்த பராக்கிரமசாலி பின் இந்தியாவால் நடுகடலில் கொல்லபட்டது வரை சொல்லிவிட்டோம்,
சரி இப்பொழுதெல்லாம் பிரபாகரனை புலியினை விட்டு அடுத்தகட்ட தலைவர் பெயர் சூட்ட ஆரம்பித்தாகிவிட்டது
இனக்காவலர் பெயருக்கு பின் அவர் நண்பர் பெயரில் படம்
அடுத்து வனக்காவலர் வீரப்பனுக்கு பின் அவரின் நண்பரின் பெயர்களில் படம் வரலாம், எப்படி?
"மாவீரன் சேத்துகுளி கோவிந்தன்"
"மாவீரன் சந்திர கவுடா"
என்றெல்லாம் இனி படங்கள் வரலாம்.
தமிழகம் அப்படித்தான், எந்த எதிரி நாட்டு தீவிரவாதி பெயரிலும் படமெடுக்கலாம்
இதே அமெரிக்காவின் ஹாலிவுட்டில் "மாவீரன் பின்லேடன் " " வீராதி வீரன் ஹிட்லர்" என்றோ படம் எடுக்க முடியுமா?
மாவீரன் மவுனாலா மசூத் என லஷ்கர் தலைவன் பெயரில் இந்தி படம் எடுத்து மும்பையில் ஓடவிட முடியுமா?
இப்படிபட்ட தமிழ்சினிமாகாரர்களை என்ன செய்யலாம், இவர்கள் சினிமாவும் செல்லாது என சொல்லி தடை செய்தால் எப்படி இருக்கும்?
செய்யலாம் என்ன கெட்டுவிடும்.
நிச்சயமாக சென்சார் போர்டு கடமைகளில் இதுவும் ஒன்று
No comments:
Post a Comment